'இந்தியன் 2' படம் தமிழகத்தின் கதை இல்லை.. ஷங்கர் கூறிய ஆச்சரிய தகவல்..!

  • IndiaGlitz, [Tuesday,June 25 2024]

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவான ’இந்தியன் 2’ திரைப்படம் அடுத்த மாதம் 12ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடந்த போது இந்த படம் குறித்த சில ஆச்சரியமான தகவல்களை இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

’என்னுடைய படங்கள் பொதுவாக இப்படி நடந்தால் எப்படி இருக்கும் என்ற அடிப்படையில் இருக்கும், அதே போல் தான் இந்தியன் தாத்தா மீண்டும் வந்தால் எப்படி இருக்கும் என்ற எனது கனவு தான் இந்த படத்தின் கதை.

முதல் பாகம் தமிழகத்தில் நடக்கும் வகையில் கதையம்சம் அமைக்கப்பட்டு இருக்கும் நிலையில் இரண்டாம் பாகத்தில் இந்தியன் தாத்தா மற்ற மாநிலங்களுக்கும் செல்லும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளது.

முதல் பாகத்திற்காக கமல்ஹாசனுக்கு 40 நாள் பிராஸ்தெடிக் மேக்கப் போட்ட நிலையில் இரண்டாம் பாகத்திற்கு 70 நாள் பிராஸ்தெடிக் மேக்கப் போட்டோம். அதனால் ஒவ்வொரு நாளும் இந்தியன் தாத்தா எங்கள் கூடவே இருப்பது போன்ற உணர்வு எங்களுக்கு ஏற்பட்டது என தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு காட்சியில் 4 நாள் கயிற்றில் தொங்கி கமல் நடித்தார் என்றும் இந்த படத்தில் அவர் தமிழ் மட்டும் என்று பஞ்சாப் மொழியும் பேசி நடித்துள்ளார் என்றும் அவரைப் பொறுத்தவரை எந்த ஒரு கஷ்டமான காட்சி கொடுத்தாலும் அதை சிறப்பாக செய்து விடுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.

அனிருத் இசை குறித்து அவர் கூறிய போது நான் எதிர்பார்த்ததை விட அனிருத் மிகவும் சிறப்பாக இசையமைத்து கொடுத்தார் என்றும் கூறினார். மேலும் ’இந்தியன்’ படத்தில் உள்ள சுகன்யா கேரக்டர் ‘இந்தியன் 2’ படத்தின் கதைக்கு தேவைப்படவில்லை என்றும் அதனால் தான் அவர் பயன்படுத்தப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

More News

நாகார்ஜூனாவை அடுத்து சிக்கலில் சிக்கிய தனுஷ்.. அதிர்ச்சி வீடியோ வைரல்..!

சமீபத்தில் நடிகர் நாகார்ஜுனா ஹைதராபாத் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தபோது முதியவர் ஒருவர் அவருடன் பேச விருப்பப்பட்ட போது, நாகார்ஜுனாவின்

ரூ.250 கோடி நஷ்டம்.. 7 மாடி கட்டிடத்தை விற்பனை செய்த 'இந்தியன் 2' நடிகையின் கணவர்..!

'இந்தியன் 2' படத்தில் நடித்த நடிகையின் கணவர் ரூபாய் 250 கோடி சினிமா தயாரிப்பு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மும்பையில் உள்ள ஏழு மாடி கட்டிடத்தை விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'சின்ன சின்ன கண்கள்' பாடலை ஒரிஜினலாக பாடியது சூப்பர் சிங்கர் பிரபலமா? ஆச்சரிய தகவல்..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'சின்ன சின்ன கண்கள்' என்ற பாடல் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த பாடலில் மறைந்த பவதாரணி குரல் ஏஐ மூலம் பயன்படுத்தப்பட்டது

வதந்தி உண்மைதானா? ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி செய்த அதிர்ச்சி சம்பவம்..!

ஜெயம் ரவி மற்றும் அவருடைய மனைவி ஆர்த்தி ஆகிய இருவரும் கருத்து வேறுபாடுடன் இருப்பதாகவும் இருவரும் கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்வதாகவும் விரைவில் விவாகரத்து செய்ய போவதாகவும்

எம்பி ஆனதும் விஜய்க்கு போட்டியாக களமிறங்கிய கங்கனா ரனாவத்.. அதிரடி அறிவிப்பு..!

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மாண்டி என்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட நடிகை கங்கனா ரனாவத்  வெற்றி