கொரோனா வைரஸ் எதிரொலி: இன்று ஒரே நாளில் 6 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் அடைந்த இந்தியர்கள்

  • IndiaGlitz, [Monday,March 16 2020]

கொரோனா வைரஸ் காரணமாக உலகமெங்கும் பொருளாதார சரிவு ஏற்பட்டிருக்கும் நிலையில் கடந்த சில நாட்களாக இந்திய பங்குசந்தைகள் பெரும் சரிவை சந்தித்து வருகிறது. இன்று ஒரே நாளில் இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 2,700 புள்ளிகளும், நிப்டி 750 புள்ளிகளும் குறைந்துள்ளது என்பதால் முதலீட்டாளர்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்

இன்று ஒரு நாளில் மட்டும் பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு சுமார் 6 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. உலகம் முழுவதும் குறிப்பாக ஆசிய நாடுகளின் பங்குச்சந்தை மிக கடுமையான சரிவை சந்தித்து வருகிறது

இன்றைய பங்குச் சந்தையில் இன்ஸ்டன்ட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி ஆகியவற்றின் பங்குகள் பெரும் சரிவை சந்தித்துள்ளதாகவும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகளும் மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்து இருப்பதாகவும் தெரிகிறது. அதேபோல் தங்கம், வெள்ளி உள்பட கமாடிட்டி பொருட்களின் விலையும் கடும் சரிவை சந்தித்துள்ளது. இதேபோல் தொடர்ந்து பங்குச்சந்தை சரிவு ஏற்பட்டால் பங்குசந்தையில் முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது

More News

மற்றோர் பேராபத்து!!! 1990 களை விட 6 மடங்கு அதிகமாக உருகும் துருவப் பனிக்கட்டிகள்!!!

உலகம் முழுக்க தற்போது கொரோனா பற்றிய பாதிப்புகள் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றன.

தமிழக பள்ளி, கல்லூரிகளை மூட முதல்வர் ஈபிஎஸ் உத்தரவு!

கொரோனா  வைரஸ் காரணமாக எல்கேஜி யுகேஜி வகுப்புகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை

கொரோனா எதிரொலி: துப்பாக்கி வாங்க நீண்ட வரிசையில் நிற்கும் பொதுமக்கள்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பீதி காரணமாக மால்கள், கடைகள் ஆகியவை மூடப்பட்டு வரும் நிலையில் அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவிக்க மக்கள் முன் வந்து கொண்டிருக்கின்றனர்.

முதலமைச்சரை உருவாக்குபவன் தான் தலைவன்: பொன்ராஜ்

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது தனது கட்சி வெற்றி பெற்றால், தான் முதலமைச்சர் வேட்பாளர் இல்லை என்றும்,

'கொரோனா' பெயரில் புதிய தமிழ்ப்படம்!

உலகின் அனைத்து நாட்டு மக்களும் கொரோனா குறித்து பேசி வரும் நிலையில் இதையே ஒரு டைட்டிலாக வைக்க தயாரிப்பாளர் கில்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது