பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிக்கு தடை: மத்திய அரசு மீண்டும் அதிரடி

  • IndiaGlitz, [Wednesday,September 02 2020]

இந்தியா மற்றும் சீனா நாடுகளின் எல்லையில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் சமீபத்தில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் மோதிக்கொண்டதில் இந்திய தரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35 ராணுவ வீரர்கள் பலியானதாக கூறப்படுகிறது.

இந்த மோதலை அடுத்து மத்திய அரசு அதிரடியாக சீனாவின் 59 முக்கிய செயலிகளுக்கு தடை விதித்தது. அதில் டிக் டாக், ஹலோ ஆப் உள்ளிட்ட பிரபலம் வாய்ந்த செயலிகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது இதனை அடுத்து சீனாவின் மற்ற செயலிகளும் அவ்வப்போது தடை செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 118 செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவில் பப்ஜி மொபைல் செயலிக்கு இளைஞர்கள் குறிப்பாக மாணவர்கள் அடிமையாகி வருவதாகவும், ஒரு சிலர் உயிரையும் இழந்து வருகின்றனர் என்று செய்திகள் அவ்வப்போது வெளியானதால் இந்த செயலியை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனை அடுத்து இந்தியாவில் உள்ள இளைஞர்கள் ஏராளமானோர் பாதுகாக்கப்படுவதாக கருதப்படுகிறது. சீனாவுக்கு எதிராக இந்திய அரசு எடுத்து வரும் இந்த அதிரடி நடவடிக்கைகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மனைவியிடம் போனில் தகவல் தெரிவித்துவிட்டு 8வது மாடியில் இருந்து குதித்த டாக்டர்!

மனைவியிடம் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக போனில் தகவல் தெரிவித்துவிட்டு 8வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட டாக்டர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

பவன் கல்யாண் பிறந்தநாள் கொண்டாட்டம்: மேலும் 5 ரசிகர்கள் பலி

பிரபல தெலுங்கு நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாண் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவரது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

நல்லவேளை டிக்டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்டது: அதிர்ச்சி தகவல் 

சீனாவின் செயலியான டிக்டாக் சமீபத்தில் இந்தியாவில் தடை செய்யப்பட்டது தெரிந்ததே. இந்த செயலியால் ஏராளமான இளம் பெண்கள் கலாச்சாரத்தை மதிக்காமல் தவறான பாதையில் செல்வதாக பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

கொரோனாவை கையாள தனி ஆம்புலன்ஸ் சேவையைத் துவக்கி வைத்த முதல்வர்!!! அடுத்த அதிரடி!!!

இந்திய அளவில் கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது

சென்னை மினி பாகிஸ்தானாக மாறுகிறதா??? வைரலாகும் பகீர் புகைப்படம்!!!

சென்னை மினி பாகிஸ்தானாக மாறிவருகிறது என்ற தகவலுடன் கடந்த சில தினங்களாக ஒரு புகைப்படம் டிவிட்டரில் அதிகம் வைரலாகி வருகிறது.