பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் சென்ற கார் விபத்து.. படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி!

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சென்ற கார் விபத்துக்குள்ளானதை அடுத்து அவர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் காரில் சென்று கொண்டிருந்தபோதே திடீரென கார், சாலை தடுப்பு மீது மோதி தீப்பிடித்து எரிந்தது.

இந்த விபத்தில் தலையில் படுகாயத்துடன் ரிஷப் பண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் கிரிக்கெட் வீரர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதை அடுத்து எதிரில் வரும் வாகனங்கள் கூட தெரியாமல் இருந்த நிலையில் தான் சாலையில் உள்ள தடுப்பு தெரியாமல் ரிஷப் பண்ட் சென்ற கார் மோதியதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

More News

கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்.. கோடிக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி!

பிரேசில் நாட்டிற்காக உலக கோப்பையை மூன்று முறை பெற்று தந்த கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானதை அடுத்து உலகம் முழுவதிலும் உள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

100வது வயதில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் காலமானார்.. உலக தலைவர்கள் இரங்கல்

 பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது 100வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் இன்று அவர் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு

'கேஜிஎப் 3' படத்தில் கிரிக்கெட் வீரர்கள் பாண்ட்யா சகோதரர்கள்? வைரல் புகைப்படம்

பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்த 'கேஜிஎப்' மற்றும் 'கேஜிஎப் 2' ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பெற்ற நிலையில் விரைவில் 'கேஜிஎப் 3'  படம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

'துணிவு' டிரைலர் எப்போது? செம அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அஜித் நடித்த 'துணிவு' திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'சீக்கிரமே அவருடன் இணைவேன்..' பிரபல இசையமைப்பாளர் குறித்து  பா ரஞ்சித்

 பிரபல இயக்குனர் பா ரஞ்சித் மார்கழியில் மக்கள் இசை என்ற விழாவை நடத்தி வரும் நிலையில் அந்த விழாவில் பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கலந்துகொண்டார்..