எல்லையில் கத்திக் கம்புகளுடன் நிற்கும் சீன இராணுவ வீரர்கள்!!! கதிகலங்க வைக்கும் பின்னணி!!!

 

கடந்த சில தினங்களுக்கு கிழக்கு லடாக் பகுதியில் சீன இராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இந்தியா கடும் குற்றம் சாட்டியிருந்தது. இந்நிலையில் சீன இராணுவ வீரர்கள் சிலர் தங்களது துப்பாக்கிகளைத் தரையைநோக்கி வைத்து விட்டு கைகளில் கத்தி, கம்புகளுடன் நிற்பதைப் போன்ற ஒரு புகைப்படம் ஊடகங்களில் வெளியாகி கடும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்தப் புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது, எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பது போன்ற பல்வேறு தகவல்களைக் குறித்து இந்திய இராணுவத்தின் உயர்மட்டம் தற்போது விளக்கம் அளித்து இருக்கிறது.

இந்நிலையில் கிழக்கு லடாக் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் சீன இராணுவ வீரர்கள் இருந்த நிலையில் இந்தப் புகைப்படம் எடுக்கப் பட்டது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்தப் புகைப்படம் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி மாலை எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. துப்பாக்கியை ஏந்திவந்த சீன இராணுவ வீரர்கள் எல்லைக் கட்டுப்பாட்டுக்கோட்டு பகுதியை நோக்கி வந்ததாகவும் அதையடுத்து இந்திய இராணுவம் அவர்களை கடுமையாக எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்திய இராணுவம் எச்சரித்த நிலையில் சீன இராணுவ வீரர்கள் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியை நோக்கி வராமல் நின்றனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டை இந்த குழுவினர்தான் நடத்தினரா என்பதை குறித்து எந்த விளக்கமும் வெளியாக வில்லை. இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளம் மற்றும் ஊடகங்களில் வெளியான பிறகே சீன இராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்டதாக இந்தியா குற்றம் சாட்டியிருந்தது.

இச்சம்பவத்தை குறித்து, சீன வெளயுறவுத்துறை அமைச்சகம் இந்திய இராணுவத்தினர் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியைத் தாண்டிவந்து சீன இராணுவத்தை எச்சரித்ததாகவும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் குற்றம் சாட்டியது. சீனாவின் இந்தக் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த இந்திய இராணுவத்தினர் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் எந்தவொரு கட்டத்திலும் இந்திய இராணுவம் அத்துமீறவோ துப்பாக்கி பிரயோகம் செய்யவோ இல்லை. மேலும் இருநாடுகளும் மேற்கொண்டு இருக்கும் பரஸ்பர ஒப்பந்தங்களை சீன இராணுவம்மீறி முரட்டுத்தனமான செயல்பாடுகளில் ஈடுபட்டது என்றும் தெளிவுப்படுத்தி இருக்கிறது.

இச்சம்பவத்தால் இந்திய-சீன எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் எச்சரிக்கை செய்வதற்காகக் கூட இதுவரை இந்திய இராணுவம் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது இல்லை. பல நூற்றாண்டுகளாக இந்த நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டு வருகிறது. ஆனால் சீனா விதிமுறைகளை மீறி கடந்த சில தினங்களாக ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. பல கட்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் அரசியல் தலையீடுகளாலும் இதைச் சரிப்படுத்த முடியவில்லை என்று இந்திய இராணுவத்தின் உயர்மட்டம் கவலைத் தெரிவித்துள்ளது.

More News

பாஜகவில் சிவகார்த்திகேயன்? காயத்ரி ரகுராம் அதிரடி தகவல் 

கோலிவுட் திரையுலகில் ஏற்கனவே பல நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் என ஒரு பட்டாளமே பாஜகவில் இணைந்து வரும் நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனும்

கொரோனா சிகிச்சைக்கு 2,000 மினி மருத்துவமனைகள்- தமிழக முதல்வரின் அடுத்த அதிரடி!!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காகத் தமிழக அரசு பல்வேறு அதிரடி திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.

கொரோனா காலத்தில் ரூபாய் நோட்டைப் பார்த்து பயந்து ஓடும் வணிகர்கள்!!! அச்சமூட்டும் காரணங்கள்!!!

கொரோனா வைரஸ் பொருட்களின்மீது நாள் கணக்கில் தங்கியிருக்கும் என்ற தகவலை விஞ்ஞானிகள் முன்பே அறிவுறுத்தி இருந்தனர்.

எந்த நிபந்தனையையும் ஏற்க முடியாது, தியேட்டர்களை திருமண மண்டபங்களாக மாற்றிவிடுவோம்: திருப்பூர் சுப்பிரமணியம்

தயாரிப்பாளர்கள் வைத்த எந்த நிபந்தனையையும் ஏற்க முடியாது என்றும் திரையரங்குகளை நடத்த முடியாவிட்டால் மால்கள் மற்றும் திருமண மண்டபமாக மாற்றி விடுவோம்

நடிகர்-வழக்கறிஞர் துரைபாண்டியன் காலமானார்: அதிமுகவினர் இரங்கல்

பிரபல வழக்கறிஞரும் நடிகருமான துரைபாண்டியன் இன்று சென்னையில் காலமானார். அவரது மறைவை அடுத்து திரையுலகினர்களும் சக வழக்கறிஞர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.