ஜியோ சினிமாவில் இலவசமாக வெளியாகும் பிரபல நடிகையின் த்ரில் படம்..!

  • IndiaGlitz, [Tuesday,May 23 2023]

ஜியோ சினிமாவில் தற்போது ஐபிஎல் போட்டிகள் இலவசமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் ஐபிஎல் போட்டிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. இந்த நிலையில் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக ஜியோ சினிமா அதிரடியாக தமிழ் உள்பட பல மொழி திரைப்படங்களை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். குறிப்பாக விஷ்ணு விஷால் நடித்த ’மோகன் தாஸ்’ என்ற திரைப்படம் ஜியோ சினிமாவில் வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியானது.

அது மட்டும் இன்றி வார்னர் பிரதர்ஸ் மற்றும் HBO ஆகிய நிறுவனங்களுடன் ஜியோ சினிமா ஒப்பந்தம் செய்துள்ளதால் விரைவில் இனி ஜியோ சினிமாவில் ஹாலிவுட் திரைப்படங்களையும் பார்க்க முடியும்

இந்த நிலையில் ரகுல் பிரீத் சிங் நடித்த 'Boo’ என்ற பேய் படம் ஜியோ சினிமாவில் ஒளிபரப்பாக இருப்பதாகவும் இந்த படத்தை பார்ப்பதற்கு கட்டணம் எதுவும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ள நிலையில் அந்த ட்ரெய்லர் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ரகுல் ப்ரீத் சிங், நிவேதா பெத்துராஜ், மேகா ஆகாஷ், மஞ்சிமா மோகன், வித்யூ ராமன், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்த படத்தில் இந்த படத்தை விஜய் என்பவர் இயக்கி உள்ளார். ஜிவி பிரகாஷ் இசையில் உருவான இந்த படம் மே 27ஆம் தேதி முதல் ஜியோ சினிமாவில் தமிழ் தெலுங்கு மொழிகளில் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்குவது இந்த பிரபல இயக்குனரா?

 தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகரான யோகி பாபு ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் அவர் ஹீரோவாக நடிக்கும் படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில்

மனைவியை பணயம் வைத்து சூதாட்டத்தில் தோல்வி.. நண்பருக்கு விருந்தாக்க முயற்சித்த கணவன்..!

மனைவியை பணயம் வைத்து சூதாட்டத்தில் தோல்வி அடைந்த கணவர் தனது நண்பருக்கு மனைவியை விருந்தாக்க முயற்சித்த சம்பவம் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஜெயலலிதாவின் கடைசி கதாநாயகன் சரத்பாபுவா? ஆச்சரியமான தகவல்..!

 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஸ்ரீதர் இயக்கத்தில் உருவான  'வெண்ணிறை ஆடை' என்ற திரைப்படத்தில் அறிமுகமானாலும் அவரது முதல் கதாநாயகன் எம்ஜிஆர் என்பதும் இருவரும் இணைந்து 'ஆயிரத்தில் ஒருவன்' என்ற

சரத்பாபுவுக்கு அஞ்சலி செலுத்த கமல் ஏன் வரவில்லை: சுஹாசினி விளக்கம்..!

தமிழ் திரை உலகின் பழம்பெரும் நடிகர் சரத்பாபு நேற்று காலமான நிலையில் அவரது உடல் இன்று அஞ்சலிக்காக அவரது சென்னை வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரஜினிகாந்த் உட்பட பல திரையுலக

'வீரமே வாகை சூடும்' நடிகை மீது போலீஸ் புகார்.. ஐபிஎஸ் அதிகாரியுடன் மோதலா?

 ஐபிஎஸ் அதிகாரியின் வாகனத்தை சேதப்படுத்தியதாக 'வீரமே வாகை சூடும்' என்ற படத்தில் நடித்த நடிகை மீது போலீஸ் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.