'இந்தியன் 2' விபத்து: இன்று கமல் ஆஜர்

  • IndiaGlitz, [Tuesday,March 03 2020]

கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கி வந்த ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்த போது திடீரென ஏற்பட்ட விபத்தால் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர் என்ற அதிர்ச்சி செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த விபத்து குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த விபத்து குறித்து சம்பவ இடத்தில் இருந்த கமலஹாசன், ஷங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்ட சிலரை விசாரணை செய்ய போலீசார் திட்டமிட்டு இருப்பதாகவும் இதனை அடுத்து அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தது.

இந்த நிலையில் 'இந்தியன் 2’ படப்பிடிப்பு விபத்து குறித்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன் இன்று கமலஹாசன் ஆஜராகிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன் கமல்ஹாசன் ஆஜராக வேண்டுமென அனுப்பப்பட்ட சம்மனை அடுத்து இன்று அவர் ஆஜராக உள்ளார் என்பதும் அவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று விசாரணை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமல்ஹாசனை அடுத்து ஷங்கர் மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் விரைவில் போலீசார் முன் ஆவார்கள் என்று கூறப்படுகிறது.

More News

பாண்டவர் அணி உடைகிறதா? நாசர் மனைவி டுவிட்டால் பரபரப்பு

சமீபத்தில் நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணி மற்றும் சங்கரதாஸ் அணி என்ற இரு அணிகள் மோதியது என்பதும் இந்த தேர்தல் சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட நிலையில்

துப்பறிவாளன் உரிமை எனக்குத்தான்: மிஷ்கின் நிபந்தனைகளால் விஷால் அதிர்ச்சி

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வந்த 'துப்பறிவாளன் 2' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்ற நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்குள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு

'தளபதி 65' பட நாயகி விஷயத்தில் திடீர் திருப்பம்

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 65வது திரைப்படமான 'தளபதி 65' திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்க இருப்பதாகவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும்

நயன்தாராவை கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த ஆர்ஜே பாலாஜி

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான 'மூக்குத்தி அம்மன் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில்

தீவிர ரசிகரை கட்டியணைத்து பாராட்டிய ரஜினிகாந்த்: வைரலாகும் புகைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஓய்வாக இருக்கும்போது அவ்வபோது தனது ரசிகர்களை சந்தித்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.