இந்திய அணி எங்களை அரையிறுதிக்கு வரவிடாது: பாகிஸ்தான் முன்னாள் வீரர் குற்றச்சாட்டு

இந்திய அணி இனிவரும் போட்டிகளில் வேண்டுமென்றே தோல்வி அடைந்து எங்களை அரையிறுதிக்கு வரவிடாமல் செய்யும் வாய்ப்பு இருப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பாசித் அலி குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஒரு அணியை அரையிறுதிக்கு வரவிடாமல் தடுக்க, வேண்டுமென்றே தோல்வி அடைந்த வரலாறு ஏற்கனவே கிரிக்கெட் வரலாற்றில் உள்ளது. அந்த வகையில் பாகிஸ்தான் தற்போது நடந்து வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் அடுத்து நடைபெறும் வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டும். அதுமட்டுமின்றி வங்கதேசம், இலங்கை மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் தோல்வி அடைய வேண்டும். அப்போதுதான் பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

இந்த நிலையில் பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த பாசித் அலி, 'எங்களை நிச்சயம் இந்திய அணி அரையிறுதிக்குள் வரவிடமாட்டார்கள். இந்திய அணிக்கு வங்கதேசம், இங்கிலாந்து, இலங்கை அணியுடன் போட்டி இருக்கிறது. இதில் இங்கிலாந்து அணியுடன் இந்தியா வெற்றி பெற்றுவிட்டால் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும். அதன் பின்னர் இலங்கை, வங்கதேசம் அணிகளுடன் வேண்டுமென்றே இந்திய அணி தோல்வி அடைந்து, பாகிஸ்தான் அணியை அரையிறுதிக்குள் வரவிடாமல் செய்ய வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்திய அணி வேண்டுமென்றே அவ்வாறு விளையாடி தோல்வி அடைந்தால் அடுத்து என்ன நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்' என்று கூறியுள்ளார்.

ஆனால் இந்த உலகக்கோப்பை தொடரில் ஒரு தோல்வியை கூட பெறாத ஒரே அணியாக இந்திய அணி கம்பீரமாக வலம் வந்து கொண்டிருக்கின்றது. இந்த பெருமையை தக்க வைத்து கொள்ள அடுத்து வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்திய அணி விளையாடும் என்றே கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

More News

குழந்தைகளை வன்கொடுமை செய்பவர்களை தூக்கில் போட்டாலும் பயனில்லை: கமல்ஹாசன்

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மட்டுமின்றி கடந்த சில ஆண்டுகளாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும் அதிகமாகி வருகிறது

வனிதாவுக்குள்ளும் இவ்வளவு சோகமா? 

பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக செண்டிமெண்ட் மழை பொழிந்து வருகிறது. ஏற்கனவே ரேஷ்மா, சேரன், சரவணன், தர்ஷன், மோகன் வைத்யா,

கொலையுதிர் காலம் படத்தின் தடை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'கொலையுதிர்க்காலம்' திரைப்படம் ஜூன் 14ஆம் தேதியே ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த படத்தின் டைட்டிலில் வெளியான சுஜாதாவின் 'கொலையுதிர்காலம்'

கவுதம் மேனனுடன் இணைந்த சிபிராஜ்!

நடிகர் சத்யராஜ் நடித்த 'வால்டர் வெற்றிவேல்' திரைப்படம் கடந்த 1993ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட்டான நிலையில் தற்போது அவரது மகன் சிபிராஜ் 'வால்டர்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அப்பான்னு கூப்பிட்டது தப்பா? மோகன் வைத்யாவுக்கு குவியும் கண்டனங்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் தர்ஷன் மற்றும் லாஸ்லியா இருவரும் இலங்கைத்தமிழர்கள் என்று தெரிந்ததே. அதிலும் நேற்று தர்ஷன் தனது வீட்டின் சோகக்கதையை கூறியபோது