வாரன் பஃபெட்டை பின்னுக்கு தள்ளினார் முகேஷ் அம்பானி: 

உலக கோடீஸ்வரர் பட்டியலில் 9 வது இடத்தில் இருந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி 8வது இடத்தில் இருந்த வாரன் பஃபெட்டை பின்னுக்குத் தள்ளியுள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உள்ள நிலவரப்படி வாரன் பஃபெட்டின் மொத்த சொத்து மதிப்பு 67.9 பில்லியன் டாலர்கள் என்பதும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 68.3 பில்லியன் டாலர் என்பதும் குறிப்பிடத்தக்கது

பேஸ்புக் இன்க் மற்றும் சில்வர் லேக் ஆகிய நிறுவனங்களிடமிருந்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் யூனிட் 15 பில்லியன் டாலருக்கும் அதிகமான முதலீடுகளைப் பெற்றதால், மார்ச் மாதத்தில் குறைந்த அளவிலிருந்து அம்பானியின் இந்திய நிறுவனங்களின் பங்குகள் இருமடங்காக அதிகரித்துள்ளதால் அவர் வாரன் பஃபெட்டை தற்போது முந்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் பிபி பிஎல்சி நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன் ரிலையன்ஸ் எரிபொருள்-சில்லறை வணிகத்தில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்தது என்பதும் இதனாலும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு மேலும் உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது..

லண்டனை சேர்ந்த பிபி பிஎல்சி மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் இணைந்து ஜியோ பிபி (Jio BP) என்ற புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளனர் என்பதும் இந்த நிறுவனத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 51 சதவிகித பங்குகளும், பிபி பிஎல்சி நிறுவனத்திற்கு 49 % பங்குகளையும் பங்குகளையும் வைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

அதே நேரத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக 2.9 பில்லியன் டாலர்களை தொண்டு நிறுவனத்திற்கு வழங்கியதால் இந்த வாரம் வாரன் பபெட் சொத்து மதிப்பு குறைந்தது என்பதும் இதனால் அவர் 8வது இடத்தில் இருந்து 9வது இடத்திற்கு தள்ளப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

சிபிசிஐடியின் முக்கிய அறிக்கை: சாத்தான்குளம் வீடியோவை டெலிட் செய்த சுசித்ரா

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் தந்தை மகன் காவல் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே.

சாலையில் கிடந்த ரூ.25 லட்சம் மதிப்பு மதுபானங்கள் அள்ளிச்சென்ற மதுப்பிரியர்களால் பரபரப்பு

மதுபானங்களை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று திண்டுக்கல் அருகே விபத்துக்குள்ளாகி கவிழ்ந்ததை அடுத்து சிதறிக்கிடந்த மதுபாட்டில்களை அள்ளிச்சென்ற மதுப்பிரியர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நடுரோட்டில் கொள்ளை முயற்சி: கணவரை காப்பாற்றிய இளம்பெண்ணின் வீரம்!

பெங்களூரில் நடுரோட்டில் திடீரென கொள்ளையர்கள் வழிமறித்து கொள்ளையடிக்க முயன்றபோது கணவரை அவரது மனைவி வீரமுடன் காப்பாற்றிய சம்பவம் ஒன்று தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

முதல் படத்தின் சிறப்பு காட்சியை ஏற்பாடு செய்த எமிஜாக்சன்

பிரபல இயக்குனர் விஜய் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளிவந்த 'மதராசபட்டணம்' என்ற திரைப்படத்தில் தான் நடிகையாக தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன் என்பது தெரிந்ததே.

காமக்கொடூரன் கையில் மாட்டிய 300 குழந்தைகள்!!! ஆண்டுக் கணக்கில் தொடர்ந்த அவலம்!!!

இந்தோனேஷியா தலைநகர் ஜகர்த்தாவில் 300 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வன்கொடுமை செய்ததாக ஒருவர் கைது செய்யப் பட்டு இருக்கிறார்