நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த முதல் நாடு இந்தியா: இஸ்ரோவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

  • IndiaGlitz, [Wednesday,August 23 2023]

நிலவின் தென் துருவதற்கு அனுப்பப்பட்ட இந்தியாவின் சந்திராயன் 3 என்ற விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதை அடுத்து பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இன்று மாலை 6.04 மணிக்கு நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் என்று இஸ்ரோ அறிவித்திருந்த நிலையில் திட்டமிட்டபடி சரியாக நிலவில் தரை இறங்கியது. நிலவிலிருந்து 700 மீட்டர் தூரம் இருக்கும் போதே தரையிறங்கும் இடத்தை உறுதி செய்து புகைப்படம் எடுத்து அனுப்பிய விக்ரம் லேண்டர், அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நிலவை நெருங்கியது.

விக்ரம் லேண்டர் 100 மீட்டர் தூரம் இருக்கும் போது மீண்டும் தரையிறங்கும் இடத்தை உறுதி செய்தது . இதனை அடுத்து சரியாக 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது.

இதனை தென் ஆப்பிரிக்காவில் இருந்து நேரடியாக பார்த்துக் கொண்டிருந்த பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இன்று இந்தியா நிலவில் உள்ளது என்றும், இந்திய விஞ்ஞானிகளின் சாதனை மிகப்பெரியது என்றும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மக்களும் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர் என்றும் நிலவின் தென்துருவத்தை அடைந்த முதல் நாடு இந்தியா என்ற பெருமையும் கிடைத்துள்ளது என்றும் அவர் கூறினார். இந்திய விஞ்ஞானிகளுக்கு உலகெங்கிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

More News

மீண்டும் ஷங்கர் - விக்ரம் படம்.. ரிலீஸ் எப்போது தெரியுமா?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், சதா நடிப்பில் உருவான 'அந்நியன்' திரைப்படம் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில்

வெற்றிமாறன் இயக்கத்தில் மிஸ் ஆன கிரிக்கெட் படம்.. மீண்டும் உருவாகுமா?

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருந்த கிரிக்கெட் படம் ஒன்று மிஸ் ஆகிவிட்டதாகவும் ஆனால் இந்த படம் விரைவில் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் நடிகரும் இசையமைப்பாளருமான

'7ஜி ரெயின்போ காலனி 2' படத்தின் நாயகி இவரா?  படப்பிடிப்பு எப்போது?

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ஏஎம் ரத்னம் மகன் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் நடிப்பில் உருவான '7ஜி ரெயின்போ காலனி' என்ற திரைப்படம் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

மீனவ பெண்களுடன் ஒரு வாரம் தங்குகிறார் கீர்த்தி சுரேஷ்.. இதுதான் காரணம்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க சமீபத்தில் ஒப்பந்தமான நிலையில் இந்த படத்திற்காக அவரை இயக்குனர், மீனவ பெண்களுடன் ஒரு வாரம் பழகும் வகையில் அவர்களுடன் தங்க வைக்க திட்டமிட்டுள்ளதாக

4 வேதங்கள் கதையம்சம் கொண்ட படத்தில் சூர்யா.. உறுதி செய்த இயக்குனர்..!

நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் வரிசையாக பல படங்களில் கமிட் ஆகியுள்ளார்.