பூர்ணிமாவிடம் சரியாக பேசாதது ஏன்? இந்துஜா கூறிய காரணம்..!

  • IndiaGlitz, [Monday,December 11 2023]

நடிகை இந்துஜா சமீபத்தில் ’பார்க்கிங்’ பட ப்ரமோஷனுக்காக பிக் பாஸ் வீட்டிற்கு சென்றபோது தனது கல்லூரி தோழியான பூர்ணிமாவிடம் சரியாக பேசவில்லை. இது குறித்து பூர்ணிமாவும் மாயாவிடம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்

இந்த நிலையில் நடிகை இந்துஜா, பூர்ணிமாவிடம் ஏன் சரியாக பேசவில்லை என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். ‘பார்க்கிங்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக தான் நாங்கள் பிக் பாஸ் வீட்டுக்கு சென்றோம். அப்போது பிக் பாஸ் நிர்வாகம் எங்களுக்கு சில விதிமுறைகளை கூறியிருந்தனர்

உள்ளே யாரும் யாருக்கும் ஃபேவரைட் ஆக பேச வேண்டாம் என்று சொல்லித்தான் உள்ளே அனுப்பினார்கள். பூர்ணிமா எனது கல்லூரி தோழியாக இருந்தாலும் இந்த நிபந்தனையால் தான் நான் அவரிடம் அளவோடு பேசினேன்.

பூர்ணிமா நல்ல பெண், நன்றாகத்தான் விளையாடி வருகிறார், சில விஷயங்களை மட்டும் அவர் மாற்றிக் கொண்டால் கண்டிப்பாக அவர் பெரிய அளவில் வருவார்’ என்று இந்துஜா கூறினார்.

More News

இவங்க எல்லாம் 'சலார்' படத்தை பார்க்க முடியாது: ஷாக்கிங் சென்சார் சான்றிதழ்..!

 பிரபாஸ் நடித்த 'சலார்' திரைப்படம்  டிசம்பர் 22ஆம் தேதி தமிழ், தெலுங்கு உட்பட பான் இந்திய திரைப்படமாக ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

அப்ப அது ரம்பா தொடையே இல்லையா? 25 வருடங்கள் கழித்து உண்மையை உடைத்த இயக்குனர்..!

விஜய் மற்றும் ரம்பா நடித்த பாடல் காட்சி ஒன்றில் ரம்பா இல்லாமலேயே படமாக்கியதாக இயக்குனர் 25 வருடம் கழித்து உண்மையை உடைத்து உள்ள நிலையில் இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

60வது பிறந்த நாள்.. உடன் நடித்த நடிகரை அமெரிக்கா சென்று பார்த்த மீனா-குஷ்பு..!

தன்னுடன் நடித்த நடிகரின் 60வது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்க அமெரிக்க சென்ற குஷ்பூ மற்றும் மீனாவின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பூர்ணிமாவிடம் மன்னிப்பு கேட்டு அழுது கொண்டே செல்லும் விஷ்ணு... என்ன காரணம்?

பூர்ணிமாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு விஷ்ணு அழுது கொண்டே செல்லும் காட்சி இன்றைய மூன்றாவது ப்ரோமோவில் உள்ளது

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9.. டைட்டில் வென்ற போட்டியாளர்..!

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9 இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சென்னையில் நடைபெற்றது.