close
Choose your channels

இன்று முதல் முழுவேகம் எடுக்கும் ரெய்டுகள். 4 அமைச்சர்களின் மகன்கள் தலைமறைவா?

Monday, December 26, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உயர்மதிப்பு ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்புக்கு பின்னர் நாடு முழுவதும் ஆங்காங்கே வருமான வரித்துறையினர்கள் சோதனை நடத்தி வந்தபோதிலும், தமிழகத்தில் சேகர் ரெட்டி மற்றும் ராம்மோகன்ராவ் ஆகியோர்களின் வீடுகளில் நடந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தலைமைச்செயலாளராக இருந்த ராம்மோகன்ராவ் வீட்டில் கிடைத்த ஆவணங்களால் இன்னும் பல அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இதை மெய்ப்பிக்கும் வகையில் நேற்று ஐதராபாத்தில் இருந்து 60-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை வந்துள்ளனர். சென்னை மற்றும் ஐதராபாத் வருமான வரித்துறையினர் நேற்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டதாகவும், இன்றுமுதல் அதிரடியாக ரெய்டு நடத்த வேண்டிய பட்டியலும் தயாராகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இன்று முதல் நடைபெறப் போகும் அதிரடி ரெய்டுகளில் சிக்கப் போவது யார் என்ற பரபரப்பு தமிழக உயரதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் இடையே ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நான்கு முக்கிய அமைச்சர்களின் மகன்கள் தலைமறைவாக இருப்பதாகவும், இவர்கள் ராம்மோகன் ராவின் மகன் விவேக்குடன் தொழில்ரீதியான தொடர்பில் உள்ளவர்கள் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.