சசிகலா இறந்துவிட்டதாக டுவீட் போட்ட உலகப்புகழ் பெற்ற பிரபலம்

  • IndiaGlitz, [Thursday,December 21 2017]

இன்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் நேற்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீடியோவை சசிகலா-தினகரன் ஆதரவாளர்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த நிலையில் உலகப்புகழ் பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் சசிகலா இறந்துவிட்டதாக தன்னுடைய டுவிட்டரில் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானுக்கு உலகக்கோப்பையை வாங்கித்தந்தவரும், அரசியல் கட்சி ஒன்றின் தலைவருமான இம்ரான்கான் சமீபத்தில் தனது டுவிட்டரில் தென்னிந்தியாவின் பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான சசிகலா இறந்துவிட்டதாகவும், அவரது வீட்டில் ஏகப்பட்ட நகைகள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டதாகவும் டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். மேலும் இது ஊழல் அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்

இம்ரான்கானின் இந்த டுவீட்டில் உள்ள தவறை பத்திரிகையாளர் ஒருவர் சுட்டிக்காட்டி இறந்தது சசிகலா இல்லை என்றும் அவர் தற்போது பெங்களூர் பார்ப்பன அக்ரஹார சிறையில் தண்டனை வகித்து வருவதாகவும், உண்மையில் இறந்தது சசிகலாவின் தோழி ஜெயலலிதா என்றும் கூறியுள்ளார். உடனே தனது தவறை அறிந்து இம்ரான்கான் அந்த டுவீட்டை டெலிட் செய்துவிட்டார். இருப்பினும் அந்த டுவீட்டை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வைத்த பலர், 'பாகிஸ்தான் அரசியலையே அறைகுறையாக அறிந்த இம்ரான்கானுக்கு இந்திய அரசியல் குறித்த டுவீட் தேவைதானா? என்று கலாய்த்து வருகின்றனர்.

More News

சிம்பு, தனுஷுக்கு உள்ள வித்தியாசம் என்ன? ஓவியா

பிக்பாஸ் மூலம் உலகத்தமிழர்களின் மனதில் குடிகொண்ட ஓவியா, நேற்றிரவு சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களிடம் வீடியோ சேட்டிங் செய்தார். இதில் ரசிகர்களின் பல கேள்விகளுக்கு சளைக்காமல்ன் தனது பதிலை கூறினார்

2ஜி வழக்கின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கின்றது: டிடிவி தினகரன்

2 ஜி வழக்கில் அனைவரும் விடுதலை ஆனது தனக்கு மகிழ்ச்சி என்றும், தமிழ

கனிமொழி, ராசா விடுதலை : 2ஜி வழக்கில் அதிரடி தீர்ப்பு

நாட்டையே பெரும் பரபரப்பில் ஆழ்த்திய 2ஜி வழக்கில் சற்றுமுன்னர் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒபிசைனி முதலில் தீர்ப்பின் சாரம்சத்தை வாசித்தார்.

இளம் இயக்குனரின் வேண்டுகோளுக்கு தமிழ் ராக்கர்ஸின் ரியாக்சன்

இளம் இயக்குனர் அப்பாஸ் அக்பர் இயக்கத்தில் இசையமைப்பாளர் ஜிப்ரான் தயாரிப்பில் கடந்த வாரம் வெளிவந்த 'சென்னை 2 சிங்கப்பூர்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்

ஏ.ஆர்.ரஹ்மானின் 9.09 ரகசியம் என்ன தெரியுமா?

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று இரவு 9.09 மணிக்கு தனது சமூக வலைத்தளத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக சற்றுமுன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.