தேர்தலுக்கு முன் இன்னொரு தாக்குதலா? இம்ரான்கான் சந்தேகம்

தேர்தலுக்கு முன் பாகிஸ்தான் மீது இந்திய அரசு இன்னொரு தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியதாக அந்நாட்டு நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தான் நாட்டிற்குள் புகுந்து அதிரடியாக தீவிரவாதிகளின் முகாம்களை அழித்தது. இதில் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பதட்டம் இல்லை என்றாலும் தேர்தலுக்கு முன் இந்தியா மீண்டும் ஒரு தாக்குதலை நடத்தலாம் என்றும் அவ்வாறு தாக்குதல் நடத்தினால் அதனை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளதாக பாகிஸ்தானின் முன்னணி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தேர்தலில் வெற்றி பெற கடைசி நேரத்தில் மோடி அரசு மீண்டும் ஒரு தாக்குதலை நடத்தும் என இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் ஏற்கனவே கூறியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

More News

வித்யாபாலனுடன் ரொமான்ஸ்: தல அஜித்தின் அட்டகாசமான புதிய லுக்?

தல அஜித் நடித்து வரும் 'பிங்க்' ரீமேக் திரைப்படமான 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

பிரதமர் மோடி கூறிய முக்கிய விஷயம் இதுதான்!

இன்று நாட்டு மக்களுக்கு முக்கிய விஷயம் ஒன்றை அறிவிக்கவுள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி சற்றுமுன்னர் தனது டுவிட்டரில் கூறிய நிலையில் அந்த முக்கிய விஷயம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

கோவை சிறுமி கொலை: பிரேத பரிசோதனையில் திடுக்கிடும் தகவல்

கோவையில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமி மர்மமான முறையில் படுகாயங்களுடன் கொலை செய்யப்பட்டிருந்தது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.

ரஜினி-முருகதாஸ் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தன்று வெளியாகி சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் அவர் நடிக்கும் அடுத்த படமான 'தலைவர் 166'

எம்.ஜி.ஆர் பாடலா? சிவாஜி பாடலா? குழப்பத்தில் பிரேமலதா

அதிமுக கூட்டணியில் கடைசி நேரத்தில் பெரும் சர்ச்சைக்கு பின் இணைந்த தேமுதிக வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட நான்கு தொகுதிகளை அதிமுகவிடம் இருந்து பெற்றது.