பாலைவனத்தில் நடந்தாலும் சிஎஸ்கே கூட்டம் வரும்: இம்ரான் தாஹிர்

  • IndiaGlitz, [Thursday,April 19 2018]

ஒருசில அரசியல்வாதிகள் மற்றும் ஒருசில திரையுலகினர்களின் போராட்டம் காரணமாக சென்னையில் நடக்க வேண்டிய ஐபிஎல் போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டது,. இதனால் சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் அதிருப்தியில் இருந்த நிலையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சுமார் 1000 ரசிகர்களை சிறப்பு ரயிலில் புனேவுக்கு அழைத்து சென்றுள்ளது. 

எனவே நாளை புனே மைதானத்தில் நடக்கும் போட்டியின்போது சென்னையில் இருந்து சென்ற ரசிகர்கள் சிஎஸ்கே அணிக்கு ஆதரவாக கோஷமிட்டு மைதானத்தையே கலக்குவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை

இந்த நிலையில் சென்னையின் தீவிர ரசிகர்கள் குறித்து கருத்து கூறிய இம்ரான் தாஹிர், 'கொஞ்சம் இங்க பாரு கண்ணா, இது பாசத்துக்கும் அன்புக்கும் கட்டுப்பட்ட கூட்டம் மேட்ச் புனேயில்ல இல்ல, பாலைவனத்துல நடந்தாலும் இந்த கூட்டம் வரும் உங்கள் அன்புக்கு தலை வணங்குகிறேன். எடுடா வண்டிய, போடுடா விசிலை' என்று தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். 

More News

காவிரி விவகாரம்: திமுக பிரமுகரின் கேள்விக்கு பதிலளித்த எடிட்டர் ரூபன்

காவிரி மேலாண்மை அமைக்கும் வரை சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தவிட மாட்டோம் என ஒருசில திரையுலக பிரபலங்கள் நடத்திய போராட்டம் தற்போது அவர்களுக்கே எதிராக திரும்பியுள்ளது.

சேலம் ஏரிகளை திடீரென பார்வையிட்ட சிம்பு: புதிய திட்டம் என்ன?

பியூஸ் மானுஸ் என்ற சமூக ஆர்வலர் சேலம் பகுதி மக்களுடன் இணைந்து சில ஏரிகளை தூர் வாரினார் என்பதும், அந்த ஏரிகளில் தற்போது இருக்கும் தண்ணீர்தான் அந்த பகுதி மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுகிறது

நீங்க வேற லெவல் மாஸ்: சிஎஸ்கே ரசிகர்களை புகழ்ந்த ஹர்பஜன்

இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் ஐபிஎல் போட்டியில் களமிறங்கியிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சோதனையாக சென்னையில் நடத்த திட்டமிட்டிருந்த போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டது.

ஸ்ரீரெட்டிக்கு எதிராக போராட்டம் செய்த விஷால் பட நடிகை கைது

கடந்த சில நாட்களாக ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் தெலுங்கு திரையுலகை கதிகலக்கி கொண்டிருக்கும் நடிகை ஸ்ரீரெட்டி. தெலுங்கு திரையுலகில் இவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் குரல் கொடுத்து வருகின்றனர். 

சென்னையில் செயின் திருடனை விரட்டி பிடித்த சிறுவனுக்கு காவல்துறை பாராட்டு

சென்னை அண்ணாநகரில் பெண் மருத்துவர் ஒருவரிடம் நோயாளி போல் நடித்த மர்ம நபர் ஒருவர் திடீரென அந்த பெண் மருத்துவர் அணிந்திருந்த 10 சவரன் தங்க செயினை பறித்து கொண்டு ஓடினார்.