பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த..: சிஎஸ்கே வீரரின் அதிர வைக்கும் டுவீட்

  • IndiaGlitz, [Saturday,August 22 2020]

தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்பட மொத்தம் 8 அணிகள் விளையாடும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக சென்னை அணி உள்பட ஒரு சில அணிகள் ஏற்கனவே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு சென்று விட்டது என்பதும் மீதமுள்ள அணிகளும் விரைவில் செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஒவ்வொரு ஐபிஎல் சீசன் தொடங்கும் போது சிஎஸ்கே வீரர்கள் தங்களுடைய டுவிட்டர் பக்கங்களில் அட்டகாசமான டுவிட்டுகளை பதிவு செய்து வருவார்கள். குறிப்பாக இம்ரான் தாஹிர் மற்றும் ஹர்பஜன்சிங் ஆகிய இருவரும் தமிழில் டுவிட்டுகளை பதிவு செய்து வருவார்கள் என்பது தெரிந்ததே.

அந்த வகையில் தற்போது ’பராசக்தி எக்ஸ்பிரஸ்’ என்று அழைக்கப்படும் இம்ரான் தாஹிர் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழ் டுவிட்டுகளை ரஜினியின் வசனத்தோடு ஆரம்பித்து விட்டார். அவர் இந்த சீசனின் முதல் டுவீட்டாக தமிழில் பதிவு செய்திருப்பதாவது: ‘என் இனிய தமிழ் மக்களே! உங்கள் நலம், நலம் அறிய ஆவல்! பலமுறை வந்தோம் வென்றோம் சென்றோம். இம்முறை வருகிறோம் வெல்வோம் செல்வோம் உங்கள் நல்லாசியுடன்! பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்தை... எடுடா வண்டிய போடுடா விசில.. என்று பதிவு செய்துள்ளார்.