குழந்தைங்களா, நாங்க அடிச்சா, அடிச்சது கடைசி வரைக்கும் மறக்காம இருக்கணும்: சிஎஸ்கே வீரரின் டுவீட்

  • IndiaGlitz, [Monday,October 05 2020]

நேற்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் 18வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமாக விளையாடி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி கொடுத்த 179 என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வாட்சன் மற்றும் டீபிளஸ்சிஸ் ஆகிய இருவரும் 17.4 ஓவர்களில் ஆட்டத்தை முடித்து விட்டனர்

ஐபிஎல் வரலாற்றில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இரண்டாவது அதிக ஸ்கோரை சேஸ் செய்து வெற்றி பெற்ற பெருமை நேற்றைய போட்டியில் சென்னை அணிக்கு கிடைத்தது. இதற்கு முன்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு குஜராத் அணியை எதிர்த்து விளையாடிய கொல்கத்தா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் 184 என்ற இலக்கை எட்டியதே விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்ற அதிக சேஸிங் ஸ்கோர் ஆகும். நேற்றைய வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தில் இருந்து ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சென்னை அணியின் வெற்றியை முன்னாள், இந்நாள் வீரர்கள் தங்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். சென்னை அணி விளையாடும் நாட்களில் எல்லாம் தமிழில் டுவிட்டுகளை பதிவு செய்து வரும் ஹர்பஜன் சிங் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் இந்த வெற்றி குறித்து தங்களது டுவிட்டரில் கருத்துகளை பதிவு செய்தனர்

அதில் இம்ரான் தாஹிர் தனது டுவிட்டரில் கூறியதாவது ’அடிச்சது யாரு? குழந்தைகளா... நாங்க அடிச்சா, அடிச்சது கடைசி வரைக்கும் மறக்காமல் இருக்கணும். வந்துட்டேன்னு சொல்லு திரும்பி வந்துட்டேன்னு சொல்லு. எடுடா வண்டியை போடுடா விசில்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்

அதேபோல் ஹர்பஜன்சிங் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ’சாம்பியன் சிங்கங்கள் மீண்டும் வெற்றிப்பாதைக்கு வந்துள்ளன. சிறப்பான ஆட்டம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

More News

நடிகை தமன்னாவுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி

தமிழ் உள்பட தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல்

விஜய்சேதுபதிக்கு வாழ்த்து தெரிவித்த சூர்யா!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'க/பெ ரணசிங்கம்' என்ற திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது என்பது தெரிந்ததே. ஓடிடியில் சமீபகாலமாக வெளிவந்த திரைப்படங்கள் மக்களின் ஆதரவை

ஐபிஎல் திருவிழா கள நிலவரம்: சென்னை - பஞ்சாப் அடிமேல் அடி வாங்கும் அணிகளின் மோதல்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.

பிக்பாஸ் சீசன் 4: 16 போட்டியாளர்கள் இவர்கள் தான்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் விஜய்டிவியில் இன்று மாலை 6 மணிக்கு தொடங்கவிருக்கும் நிலையில் இந்த சீசனில் கலந்து கொள்ளவிருக்கும்

ரஜினியின் அரசியல் முடிவுக்கு திடீர் ஆதரவு அளித்த சீமான்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி தான் அரசியலில் குதிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அந்த அறிவிப்பு வெளியான தேதியில்