தாசில்தார் மனைவியுடன் கள்ளக்காதல்: தடையாக இருந்த தாய் கொலை

  • IndiaGlitz, [Friday,March 06 2020]

ஓய்வு பெற்ற தாசில்தார் ஒருவரின் மனைவியுடன் கள்ளக்காதலில் இருந்த ஒருவர், கள்ளக்காதலிக்காக தன்னுடைய தாயாரை கொலை செய்த திடுக்கிடும் சம்பவம் சேலம் மாவட்டத்தில் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது

சேலம் மாவட்டத்தை சேர்ந்த நல்லம்மாள் என்ற 65 வயது பெண்ணுக்கு, சிவகுமார் என்ற 47 வயது மகன் உள்ளார். இவர் திருமணம் செய்யாமலேயே இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சிவகுமாருக்கும் அதே பகுதியை சேர்ந்த தாசில்தார் ஒருவரின் மனைவிக்கும் கடந்த 15 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது. அவ்வப்போது கள்ளக்காதலி சிவக்குமாரின் வீட்டிற்கு வந்து, இருவரும் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. இதனை நல்லம்மாள் அவ்வப்போது கண்டித்துள்ளார்

இந்த நிலையில் தங்களது கள்ளக் காதலுக்கு இடையூராக இருக்கும் நல்லம்மாவை கொலை செய்ய சிவகுமாரும் அவருடைய கள்ளக்காதலியும் முடிவு செய்தனர். இதனையடுத்து நேற்று நல்லம்மாளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து ஒரு துணியால் மூக்கு மட்டும் வாயை கட்டியுள்ளனர் சில நிமிடத்தில் நல்லம்மாள் இறந்துவிட்டார்

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நல்லம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து நிலையில் சிவக்குமாரிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக சில பதில்களை கூறியுள்ளார்

இதனை அடுத்து தங்கள் பணியில் போலீசார் சிவகுமாரை கவனித்த உடன் தாயார் நல்லம்மாளை தானும் தன்னுடைய கள்ளக்காதலியும் சேர்ந்துதான் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் தற்போது சிறையில் அடைத்துள்ளனர். 15 வருட கள்ளக்காதலிக்காக பெற்ற தாயை கொலை செய்த மகன் குறித்த சம்பவம் சேலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 

More News

கேரளாவைக் கலக்கும் தமிழ் கிராமிய பாடலைக் கேட்டீர்களா..!

பிரித்விராஜும், பிஜு மேனனும் நேரில் சென்று பார்த்தனர்.  இருவரையு&

ரஜினிக்கு உதவ தயார், ஆனால் ஒரு கண்டிஷன்: சுப்பிரமணியசாமி நிபந்தனை 

ரஜினிக்கு அரசியல் ஆலோசனை வழங்கவும் அவருக்கு உதவி செய்யவும் தான் தயார் என்றும் ஆனால் அதற்கு ரஜினிகாந்த் ஒரு நிபந்தனைக்கு கட்டுப்பட வேண்டும் என்றும்

ரஜினியின் ஏமாற்றத்திற்கு இதுதான் காரணமா? பரபரப்பு தகவல் 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களை சந்தித்தார் என்பது தெரிந்ததே

அரசு பள்ளியை ரயிலாக மாற்றிய ரஜினி ரசிகர்கள்!

தனியார் பள்ளிகள் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வைக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

நெய்வேலியில் சத்தமில்லாமல் விஜய் செய்த இன்னொரு விஷயம்!

தளபதி விஜய் நடித்து வந்த 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.