இந்த வெள்ளம் நமக்கு கற்று கொடுத்த பாடம் என்ன? இளையராஜா

  • IndiaGlitz, [Wednesday,December 16 2015]

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இளையராஜா, கலைப்புலி எஸ்.தாணு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


இந்த விழாவில் பேசிய இளையராஜா, 'இந்த மேடையில் உதவி செய்யும் கரங்களும், உதவி பெறும் கரங்களும் சினிமா கரங்களாக இருக்கின்றது. நான் கொடுக்கும் ஒவ்வொரு பொருளும் எனக்கே கொடுத்து கொண்ட மாதிரிதான் இருக்கின்றது.

நாம் செய்த குற்றத்திற்காக இறைவன் ஐம்பூதங்களில் ஒன்றான நீர் என்ற பூதத்தின் மூலமாக தண்டித்துள்ளார் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த வெள்ளம் வந்த ஒரு வாரத்தில் மக்களின் மனநிலை முற்றிலும் மாறியுள்ளது. நம் வீட்டிற்கு ஒருவர் சாப்பிட பிரெட் கொண்டு வந்தால், பக்கத்து வீட்டிலும் பசியாக இருக்கின்றார்கள். அவர்களுக்கும் பிரெட் கொடுங்கள் என்ற மனிதநேயத்தை இந்த வெள்ளம் நமக்கு கற்றுக்கொடுத்துள்ளது.

கோடிக்கணக்கில் பணம் இருந்தும் ஒரு பிரெட் வாங்க வழியில்லாமல் இருந்தது இறைவனின் குற்றமல்ல. நாம் எல்லோரும் இணைந்து செய்த குற்றத்திற்கான தண்டனை. இந்த தண்டனையில் இருந்து நாம் மனம் திருந்தி பிறருக்கு கொடுத்து உதவ வேண்டும் என்ற பாடத்தை கற்று கொள்ள வேண்டும்.

இவ்வாறு இளையராஜா பேசியுள்ளார்.

More News

கமல் மகளுக்கு கிடைத்த மாபெரும் விருது

உலக நாயகன் கமல்ஹாசன் தேசிய விருதுகள், பத்ம விருதுகள் மற்றும் பல விருதுகள் வாங்கி குவித்துள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே...

பீப் பாடலுக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து தூக்கிலிட வேண்டும். ஒய்.ஜி.மகேந்திரா

அனிருத் இசையில் சிம்பு பாடியதாக கூறப்படும் பீப் பாடல் குறித்த சர்ச்சை நீண்டுகொண்டே போகிறது. பெண்கள் அமைப்புகள்...

விக்ரம் படத்தை இயக்கும் விஷால் இயக்குனர்

விஷால் நடித்த 'தீராத விளையாட்டு பிள்ளை', சமர்', மற்றும் 'நான் மகான் அல்ல' ஆகிய மூன்று படங்களை இயக்கிய இயக்குனர் திரு இயக்கவுள்ள அடுத்த படத்தில் சீயான் விக்ரம் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது...

மீண்டும் ஜோடி சேரும் பிட்டு பட ஜோடி

சமீபத்தில் வெளியான 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' படத்தில் நடித்த ஜி.வி.பிரகாஷ்-ஆனந்தி ஜோடியின் கெமிஸ்ட்ரி...

ஜெயம் ரவியின் 'பூலோகம்' டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி

ஜெயம் ரவி, த்ரிஷா நடிப்பில் உருவாகிய 'பூலோகம்' திரைப்படம் முடிந்து பல மாதங்கள் ஆகியும் ஒருசில பிரச்சனைகள் காரணமாக ரிலீஸ் ஆகாமல் இருந்தது....