தங்கம் வென்ற மாரியப்பனுக்கு இளையதளபதி வாழ்த்து

  • IndiaGlitz, [Sunday,September 11 2016]

கடந்த மாதம் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற சிந்துவுக்கும், வெண்கலம் வென்ற சாக்ஷி மாலிக் அவர்களுக்கும் முதல் ஆளாக வாழ்த்து சொன்னவர் நமது இளையதளபதி விஜய் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் பாராஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று நாட்டிற்கே பெருமை சேர்த்த மாரியப்பன் தங்கவேலுக்கு இளையதளபதி விஜய் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரியோவில் நடைபெற்ற பாராஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளீர்கள். நாங்கள் அனைவரும் உங்கள் சாதனையை எண்ணி பெருமை அடைகிறோம். நீங்கள் இன்னும் பல உயரங்களை வெல்ல வாழ்த்துக்கள் என்று விஜய் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.