close
Choose your channels

மணிரத்னம் படத்தின் தழுவலா 'விஜய் 59'?

Wednesday, September 9, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தில் விஜய் போலீஸ் கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த படம் கடந்த 1990ல் வெளிவந்த கேப்டன் விஜயகாந்த் நடித்த 'சத்ரியன்' படத்தை தழுவி எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அட்லியின் 'ராஜாராணி' திரைப்படம் மணிரத்னம் இயக்கிய 'மெளனராகம்' படத்தை தழுவி எடுக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் இந்த படமும் மணிரத்னத்தின் மற்றொரு படத்தை தழுவி எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 'சத்ரியன்' படத்தை இயக்குனர் கே.சுபாஷ் இயக்கியிருந்தாலும் இந்த படத்தின் திரைக்கதையை எழுதி, தயாரித்தவர் மணிரத்னம் என்பது குறிப்பிடத்தக்கது

இதுகுறித்து படக்குழுவினர் கூறும்போது, 'இந்த படத்தின் கதை 'சத்ரியன்' படத்தின் கதையை ஓரளவுக்கு தழுவியதாக இருந்தாலும், அட்லியின் பாணி கண்டிப்பாக இந்த படத்தில் இருக்கும். மேலும் இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் இயக்குனர் மகேந்திரன், மற்ற சாதாரண வில்லன்களை போல அடிதடியில் இறங்காமல், மாஸ்டர் மைண்ட் வில்லத்தனம் செய்யும் கேரக்டரில் நடித்துள்ளார்.

விஜய், சமந்தா, எமிஜாக்சன், ராதிகா, கே.எஸ்.ரவிகுமார், மகேந்திரன் உள்பட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். கலைப்புலி எஸ்.தாணு பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கின்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment