இன்று முதல் இசைஞானியின் புது ஸ்டுடியோ: முதல் பாடல் யாருக்கு தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,February 03 2021]

இசைஞானி இளையராஜா கடந்த பல ஆண்டுகளாக பிரசாத் ஸ்டூடியோவில் ஒலிப்பதிவு ஸ்டூடியோ அமைத்து பாடல்களை ஒலிப்பதிவு செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்திற்கும் இளையராஜாவுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இந்த பிரச்சனையின் காரணமாக பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து இளையராஜா வெளியேறும் நிலை ஏற்பட்டது என்பதும் இது குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இளையராஜா தற்போது புதிய இடத்தில் புது ஒலிப்பதிவு ஸ்டூடியோ ஒன்றை அமைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள எம்எம் ப்ரிவியூ தியேட்டர் இருந்த இடத்தில்தான் இளையராஜா தற்போது புது ஸ்டூடியோ அமைத்துள்ளார். இன்று முதல் அந்த ஸ்டூடியோ இயங்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

இன்றைய முதல் நாளில் முதல் பாடலாக வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகும் படத்தில் இடம்பெறும் பாடல் அங்கு ஒளிப்பதிவு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. புதிய இடத்தில் தனது ஒலிப்பதிவை தொடங்கியுள்ள இசைஞானிக்கு கோலிவுட் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

More News

'மாநாடு' படத்தில் இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான்!

சிம்பு நடிப்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில், வெங்கட் பிரபு இயக்கி வரும் 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்

ராமர் நாட்டில் 93, ராவணன் நாட்டில் 51: சுப்பிரமணியன் சுவாமியின் டுவிட்டை டேக் செய்த தமிழ் நடிகர்!

பாஜக பிரமுகர் சுப்பிரமணியன் சுவாமி அவர்கள் பெட்ரோல் விலை உயர்வு குறித்து பதிவு செய்த ஒரு டுவிட்டை தமிழ் நடிகர் ஒருவர் டேக் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பிரபல இயக்குனரின் அடுத்த படத்தில் இணைந்த 'குக் வித் கோமாளி' புகழ்!

விஜய் டிவியில் ரசிகர்களின் மாபெரும் வரவேற்புடன் ஒளிபரப்பாகி வருவது நிகழ்ச்சி 'குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் குக்குகளை கோமாளிகள் அட்டகாசம் நகைச்சுவை அம்சத்துடன் இருப்பதால்

நாசாவின் செயல் தலைவர் ஆனார் இந்தியா வம்சவாளி பெண்! குவியும் ஆதிக்கம்!

கடந்த மாதம் 20 ஆம் தேதி அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக பதவியில் அமர்ந்தார் ஜோ பிடன். இவரோடு முதல் பெண் துணை அதிபர்

பிக்பாஸ் பாலாஜி வீட்டில் நிகழ்ந்த சோகம்: ரசிகர்கள் அதிர்ச்சி!

சமீபத்தில் முடிவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வின்னராக ஆரியும், ரன்னராக பாலாஜியும் தேர்வு செய்யப்பட்டார்கள் என்பது தெரிந்ததே. பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் நாளிலிருந்து