பிரபல பாடலாசிரியர் மறைவுக்கு இசைஞானி இளையராஜா இரங்கல்!

  • IndiaGlitz, [Thursday,January 06 2022]

பிரபல தமிழ் திரைப்படப் பாடலாசிரியர் நேற்று காலமான நிலையில் அவரது மறைவிற்கு இசைஞானி இளையராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்

பிரபல தமிழ் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் காமகோடியான். இவர் எம் எஸ் விஸ்வநாதன், இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, பரத்வாஜ், தேவா உள்பட பல முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றி உள்ளார்.

76 வயதான காமகோடியான் நேற்றிரவு வயது மூப்பின் காரணமாக காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. கவிஞர் காமகோடியான் மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இசைஞானி இளையராஜா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

கவிஞர் காமகோடியான் நேற்றிரவு உடல்நலமின்றி காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். அவரை எனக்கு 'வரப்பிரசாதம்' திரைப்படத்தில் வேலை செய்யும்போதே, தயாரிப்பு மேலாளராக பணியாற்றியதின் மூலம் நன்றாகவே தெரியும். அப்பொழுதே தனக்கு தமிழ்ப் பாடல்களை எழுதுவதில் ஆர்வம் இருப்பதாக கூறியிருந்தார்.

அவர் நம்முடைய எம்.எஸ்.வி அண்ணாவுடன் மிக நெருங்கிய தொடர்பிலும் இருந்தார். மேடை கச்சேரிகளில் கவிஞர் காமகோடியான் எழுதிய ‘மனிதனாயிரு’ என்ற தனிப்பாடலை எம்.எஸ்.வி அண்ணா பாடியது இன்னும் என் நெஞ்சில் நிழலாடுகிறது. என்னுடைய இசையமைப்பிலும் பல பாடல்களை சிறப்பாக எழுதியிருக்கிறார். அன்னார் மறைவு நம் தமிழ் திரையுலகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், கவிஞரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன் இவ்வாறு இசைஞானி இளையராஜா தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

More News

விநாயகர் ஓவியத்தின் முன் 'மணி ஹெய்ஸ்ட்' பிரபலம்: வைரல் புகைப்படம்!

நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான 'மணி ஹெய்ஸ்ட்' என்ற தொடர் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது என்பதும் உலகம் முழுவதும் இந்த தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்

சிவகார்த்திகேயன் படத்தயாரிப்பாளருடன் இணைந்தது சிம்புவின் 'மாநாடு'

சிவகார்த்திகேயன் படத்தை தயாரித்து வரும் தயாரிப்பு நிறுவனம் சிம்புவின் 'மாநாடு' படத்தின் ரீமேக் உரிமையை பெற்று இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பணப்பெட்டியை எடுத்தது ஏன்? சிபி கூறும் காரணம்!

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 95வது நாளாக நடைபெற்று வரும் நிலையில் இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில் இறுதிப் போட்டிக்குச் செல்லும் நான்கு போட்டியாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு

இந்த மாயாஜால அறிவியலை அடுத்த தலைமுறைக்கு அறிமுகம் செய்வோம்: நடிகை ஜோதிகா

இந்த மாயாஜால அறிவியலை அடுத்த தலைமுறைக்கு அறிமுகம் செய்வோம் என்று ஜோதிகா கூறியது தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

'பீஸ்ட்' படத்தை அடுத்து மீண்டும் வில்லனாகும் செல்வராகவன்: எந்த படம் தெரியுமா?

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பீஸ்ட்' படத்தில் முக்கிய வில்லனாக இயக்குனர் செல்வராகவன் நடித்து இருந்தார் என்பதும் இந்த படத்தில் அவர் வில்லனாக மிரட்டி இருக்கிறார் என்றும் செய்திகள் வெளியானது.