மகாகவி பாரதிக்கு நான் ஆறுதல் சொல்லியிருக்கின்றேன்: இசைஞானி இளையராஜா வீடியோ வைரல்!

  • IndiaGlitz, [Sunday,September 11 2022]

மகாகவி பாரதியார் அவர்களின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் இசைஞானி இளையராஜா அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் பாரதியார் குறித்த சில கருத்துக்களை தெரிவித்து உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

எல்லா வருடங்களும் எனக்கு இந்த நாளில் பாரதியாரின் நினைவு வரும். அது என்னை வருத்தும். என்னை பாரதியாரோடு ஒப்பிட்டு பார்த்து, ‘நிலச்சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ? என்று அவன் தன்னை தானே நொந்துகொண்டானில்லையா? ‘நல்லதோர் வீணை செய்தே, அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?’ அவனை உருவாக்கிய அம்மையே சக்தியே என்னை நலங்கெட புழுதியில் ஏறிந்துவிடுவாயோ என அவனின் நொந்தல் என்னை வருத்தும். அவருக்கு ஆறுதல் சொல்லும் வகையில் என் பட பாடலில் நான் பதில் சொல்லியிருக்கிறேன். ‘உன் குத்தமா என் குத்தமா’ பாடலில் வீதியில் இசைத்தாலும் வீணைக்கு இசையுண்டு என்று பாரதிக்கு நான் ஆறுதல் சொல்லியிருக்கிறேன்.

பாரதி கலங்குவதை என்னால் தாங்க முடியவில்லை. நாட்டை பற்றி அவன் எப்படி கற்பனை செய்து வைத்திருக்கிறான் என நினைத்தால் வியக்க வைக்கிறத்து. இன்று நதிகள் இணைப்பு திட்டத்தைப் பற்றி நாமெல்லாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவன் சிறுவயதில் நதிகள் இணைப்பு திட்டத்தை அப்போதே கற்பனை செய்திருக்கிறான். அவனை நினைத்து நாம் மரியாதையும், வணக்கமும், அஞ்சலி செலுத்துவது நமக்கு புண்ணியம் சேர்க்கும். பாரதியாரின் நினைவு நாளை நினைவில் கொண்டு தமிழக அரசு இந்த நாளை அவரின் பெயரால் அழைப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. தமிழக அரசு வாழ்க! மு.க.ஸ்டாலின் வாழ்க''

இவ்வாறு இசைஞானி இளையராஜா வீடியோவில் தெரிவித்துள்ளார்.

More News

'ஹே ராம்' படத்திற்கு பின் 'இந்தியன் 2' படம் தான்: ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் தகவல்!

கமல்ஹாசன் நடித்த 'ஹேராம்' படத்தை அடுத்து 'இந்தியன் 2' படத்திற்கு நீண்ட ரன்னிங் டைம் கொண்ட படம் என்ற பெருமை கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மகளின் புகைப்படங்களுடன் லட்சுமி ராமகிருஷ்ணனின் நெகிழ்ச்சியான பதிவு!

நடிகை மற்றும் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்துடன் நெகிழ்ச்சியான பதிவு செய்துள்ளதை அடுத்து அந்த பதிவு வைரலாகி வருகிறது. 

நடிகர்களை கொண்டாட வேண்டாம், அவர்கள் பெரியார், அம்பேத்கார் அல்ல: பிரபல நடிகர் பேட்டி!

நடிகர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாட வேண்டாம் அவர்கள் ஒன்றும் பெரியார், அம்பேத்கர் போன்ற புரட்சியாளர்கள் இல்லை என பிரபல நடிகர் ஒருவரே கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சிக்னலில் புத்தகம் விற்கும் பெண்ணுடன் செல்பி எடுத்த நடிகை: வீடியோ வைரல்!

சென்னை சாலையில் சிக்னலில் புத்தகம் விற்கும் பெண்ணுடன் தமிழ் நடிகை ஒருவர் செல்பி எடுத்து அதன் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

சூர்யாவின் 'வணங்கான்' படத்தின் மாஸ் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்!

சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் 'வணங்கான்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடந்தது என்பதும் இதில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது என்பது தெரிந்ததே