35 நாட்களில் முடித்துவிட்டேன்.. சந்தோஷமான செய்தி சொன்ன இளையராஜா..!

  • IndiaGlitz, [Thursday,May 16 2024]

இசைஞானி இளையராஜா இன்று மாலை 6:00 மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் சற்றுமுன் அவர் அந்த முக்கிய அறிவிப்பு என்ன என்பதை தெரிவித்துள்ளார். அந்த அறிவிப்பில் அவர் கூறியிருப்பதாவது:

நான் தினமும் என்னை பற்றி ஏதோ சில வீடியோக்கள் வெளிவந்து கொண்டிருப்பதாக எனக்கு வேண்டியவர்கள் சொன்னார்கள். ஆனால் நான் இதில் எல்லாம் கவனம் செலுத்துவதில்லை, ஏனெனில் மற்றவர்களை கவனிப்பது என்னுடைய வேலை அல்ல, என்னுடைய வேலையை கவனிப்பது தான் என்னுடைய வேலை. நான் என் வழியில் சுத்தமாக சென்று கொண்டிருக்கிறேன்.

நீங்கள் என்னை வாழ்த்தி கொண்டிருக்கிற நேரத்தில் கடந்த ஒரு மாதத்தில் ஒரு சிம்பொனியை நான் எழுதி முடித்து விட்டேன். ஒரு பக்கம் திரைப்படங்களுக்கு பாடல்கள் இசை அமைத்துக் கொண்டு, சில விழாக்களிலும் அவ்வப்போது கலந்து கொண்டு, மீதமுள்ள நேரத்தில் ஒரு சிம்பொனியை 35 நாட்களில் முழுவதுமாக ஃபோர் மூவ்மெண்ட்டில் உள்ள சிம்பொனியை, அதாவது சிம்பொனி என்றால் என்னவோ அதை எழுதி முடித்து விட்டேன் என்ற எனக்கு சந்தோஷமான செய்தியை நான் உங்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்.

திரைப்பட இசை, பின்னணி இசை இதெல்லாம் சிம்பொனியில் இருக்காது, ஒரு சுத்தமான சிம்பொனியாக எழுதி முடித்து இருக்கிறேன் என்பதை என்னுடைய ரசிகர்களுக்கு உற்சாகமான இந்த செய்தியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். இதனை அடுத்து இசைஞானி இளையராஜாவின் புதிய சிம்பொனிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.