உறவுகள் தொடர்கதை: இசைஞானியுடன் மீண்டும் கங்கை அமரன்!

இசைஞானி இளையராஜாவை சந்தித்துள்ளதாக கங்கை அமரன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இசைஞானி இளையராஜாவும் அவருடைய மூன்று சகோதரர்களும் சிறு வயதிலேயே சென்னைக்கு வந்து திரைப்பட வாய்ப்புகளை தேடினார்கள் என்பதும் வறுமையில் இருந்தபோது கூட ஒற்றுமையாக இருந்த சகோதரர்கள் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இசைஞானி இளையராஜா மற்றும் கங்கைஅமரன் ஆகிய இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் இருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது இசைஞானி இளையராஜாவை மீண்டும் சந்தித்துள்ளதாக கங்கை அமரன் புகைப்படத்துடன் கூடிய டுவிட்டை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் ’இன்று நடந்த சந்திப்பு’ என்றும் ’இறை அருளுக்கு நன்றி’ என்றும் ’உறவுகள் தொடர்கதை’ என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது..

இளையராஜா, கங்கை அமரனின் மகன்கள் வெங்கட்பிரபு, யுவன்ஷங்கர் ராஜா ஆகியோர் ஒன்றாக இருந்தாலும், இளையராஜாவும் கங்கை அமரனும் கடந்த சில வருடங்களாக பேசி கொள்ளவில்லை. இளையராஜா குறித்து எஸ்பிபி விவகாரம் உள்பட ஒருசில விஷயங்களில் கங்கை அமரன் கோபமாக பேட்டியும் கொடுத்திருந்தார்.இந்த நிலையில் வேற்றுமைகளை மறந்து இருவரும் மீண்டும் சந்தித்து இருப்பது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More News

ரெஸ்டாரெண்டில் லஞ்ச் சாப்பிடும் தனுஷ்: உடனிருக்கும் இளம்பெண் யார்?

இளம்பெண் ஒருவருடன் தனுஷ் ரெஸ்டாரண்டில் லஞ்ச் சாப்பிடும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

பிப்ரவரி தந்த அதிர்ஷ்டம்… ஒரே டிக்கெட்டில் கோடி ரூபாயை வென்ற இந்திய இளைஞர்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் வசித்துவரும் இந்திய இளைஞர்

12ஆவது மாடியில் தொங்கி வொர்க் அவுட் செய்த பலே அறிவாளி…  பதற வைக்கும் வீடியோ!

சமீபத்தில் ஹரியாணா மாநிலம் பரிதாபாத்தில் வசிக்கும் பெண் ஒருவர் தன்னுடைய சொந்த மகனை 10 ஆவது மாடியில் தொங்கவிட்ட

60 வயதில் திருமண நாடகம் போட்ட ஆசாமி… 14 திருமணங்களைச் செய்து மோசடி!

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹோமியோபதி டாக்டர் ஒருவர் திருமணத்

வொர்க் ஃபரம் ஹோம் கொடுத்த வரம்… 6 இடத்தில் வேலைப்பார்த்து கோடீஸ்வரனாகும் இளைஞர்!

ஐரோப்பியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா நேரத்தில் வொர்க் ஃபரம் ஹோமில் வேலைப்பார்த்து வந்துள்ளார்