அவரது மூளையை ஸ்கேன் செய்து பார்ப்பேன்… கோலியின் மனம் கவர்ந்த இவர் யார் தெரியுமா?

கால்பந்து உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்துவரும் கிறிஸ்டியானோ ரொனால்டோ பற்றி இந்தியக் கிரிக்கெட் வீரர் விராட் கோலி கூறிய கருத்துகள் இணையத்தில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த விராட் கோலி தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளுக்கான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் பதவியையும் ராஜினாமா செய்துவிட்டார். தற்போது பேட்டிங்கில் கவனம் செலுத்திவரும் அவர் ஆர்சிபி அணிக்கான போட்டோஷுட் நிகழ்ச்சியின்போது தனக்குப் பிடித்த விளையாட்டு வீரர் யார் என்ற கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார்.

அதில் கிறிஸ்டியானோ ரொனால்டோதான் எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு வீரர் எனப் பதிலளித்த கோலி, தொடர்ந்து அவராக மாறிவிட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு நான் ஒருநாள் காலையில் எழுந்தவுடன் மூளையை ஸ்கேன் செய்து பார்ப்பேன், அதில் ரொனால்டோவிற்கு எங்கிருந்து இவ்வளவு மனவலிமை வருகிறது எனப் பார்த்துவிடுவேன் என்று பதிலளித்து இருக்கிறார். இந்தப் பதிலைக் கேட்ட அவரது ரசிகர்கள் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டனாக இருந்துவரும் ரொனால்டோவிற்கு உலகம் முழுக்கவே ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். மேலும் அவருடைய மனவலிமை, டயட், வொர்க் அவுட், விளையாட்டு திறன் என்று அனைத்தையும் பார்த்து ரசிகர்கள் மெய்சிலிர்த்து வருகின்றனர். இந்நிலையில் ரெனால்டோவின் மூளையை ஸ்கேன் செய்துபார்க்க வேண்டும் என்று இந்திய வீரர் கோலி சொல்லியிருப்பது ரசிகர்கள் மத்தியில் மேலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல தங்களை கவர்ந்த விளையாட்டு வீரர் யார் என்ற கேள்விக்கு ஆர்சிபி அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மற்றும் அந்த அணியின் கேப்டன் டுபிளசிஸ் ஆகிய இருவரும் ரோஜர் பெடரர் எனும் பதிலைக் கூறியதும் குறிப்பிடத்தக்கது.

More News

10 வருஷமா பேட்டி கொடுக்காதது ஏன்? நெல்சனிடம் மனம் திறந்த தளபதி விஜய்!

தளபதி விஜய் பத்தாண்டுகளுக்குப் பிறகு 'பீஸ்ட்' படத்திற்காக சன் டிவியில் பேட்டி அளித்துள்ளார் என்பதும் அந்தப் பேட்டி வரும் பத்தாம் தேதி இரவு 9 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது

குட்டி ரசிகைக்கு சர்ப்பிரைஸ் கொடுத்த மெகா ஸ்டார் நடிகர்… நெகிழ வைக்கும் புகைப்படம்!

கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி

சன்னிலியோனுக்காக இணையும் விஜய்சேதுபதி - வெங்கட்பிரபு!

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடித்து வரும் தமிழ் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

'ஓ சொல்றியா' பாடலை அடுத்து ஆண்ட்ரியா பாடிய அடுத்த பாடல்!

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடித்த 'புஷ்பா' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஓ சொல்றியா' என்ற ஐட்டம் பாடலை பிரபல நடிகை ஆண்ட்ரியா பாடினார் என்பதும்

முன்னணி தமிழ் நடிகையின் இன்ஸ்டாகிராம் ஹேக்கிங்?

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகையின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.