close
Choose your channels

சென்னையில் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் திடீர் தற்கொலை

Friday, October 12, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையில் பிரபலமான ஐஏஎஸ் அகடாமி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த சங்கரன் என்பவர் இன்று அதிகாலை தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐஏஎஸ், ஐபிஎஸ், டிஎன்பிஎஸ்சி குரூப் 1 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கு பயிற்சி அளித்து வரும் முன்னணி பயிற்சி மையம் ஒன்றின் உரிமையாளரான சங்கரன் என்பவர் இன்று அதிகாலை அவருடைய வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். சங்கரனுக்கும் அவரது மனைவி வைஷ்ணவிக்கும் அவ்வப்போது குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், நேற்றிரவும் இருவருக்கும் சண்டை நிகழ்ந்ததாகவும், இதனால் மனவிரக்தியில் சங்கரன் தனது வீட்டின் படுக்கை அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்கொலை செய்து கொண்ட சங்கரனின் உடல் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. சங்கரன் தற்கொலைக்கு குடும்ப பிரச்னை மட்டும்தான் காரணமா அல்லது கடன் தொல்லையா? என்ற கோணத்தில் மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக மாணவ, மாணவியர் பலரின் ஐஏஎஸ் கனவு நனவாக உறுதுணையாக இருந்த சங்கரனின் மறைவு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment