'இருட்டு அறை' பிம்பம் உடைந்துவிட்டது: யாஷ்கா ஆனந்த்

  • IndiaGlitz, [Friday,October 05 2018]

பிக்பாஸ் 2 போட்டியாளர்களில் ஒருவரான யாஷிகா, ஆரம்பம் முதலே சக போட்டியாளர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வந்தவர். குறிப்பாக டாஸ்க்குகளை வெறித்தனமாக விளையாடி தனது பலத்தை நிரூபித்தார். இருப்பினும் ஐஸ்வர்யா மீதான நெருங்கிய நட்பு, மக்கள் மத்தியில் இவர் மீது வெறுப்பு ஏற்பட காரணமாகியது. இதனால் கடைசி கட்டத்தில் வெளியேற்றப்பட்டார்.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறிய யாஷிகா, 'சின்ன வயதில் இருந்தே என்னை தைரியமான பொண்ணாக என்னை என் பெற்றோர்கள் வளர்த்தனர். நானே சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் சுதந்திரத்தை அவர்கள் கொடுத்தனர். அதனால் என்னால் தெளிவான முடிவுகளை எடுக்க முடிந்தது.

'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தில் நடித்ததால் என்மீது தவறான பிம்பம் மக்கள் மத்தியில் உருவாகியது. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியால் அந்த பிம்பம் உடைந்து தற்போது என்னை சுயமாக சிந்திக்கும் ஒரு தைரியமான பெண் என்று மக்கள் நினைத்துள்ளனர். இதுவே எனக்கு கிடைத்த வெற்றிதான். நான் வெற்றி பெற வேண்டும் என்று எனக்கு சப்போர்ட் செய்த மக்கள் அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.

'நான் சின்ன வயதில் இருந்தே தைரியமான பெண். பேய் உள்பட எதற்கும் பயப்பட மாட்டேன். ஆனால் பிக்பாஸ் குரல் கேட்டால் மட்டும் பயப்படுவேன். ஆனால் அந்த வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் பிக்பாஸ் குரலை ரொம்பவே மிஸ் செய்கிறேன்' இவ்வாறு யாஷிகா தனது பேட்டியில் கூறியுள்ளார்.

More News

தொடர்மழை எதிரொலி: சென்னை பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னையின் பல பகுதிகளில் நேற்றிரவு முழுவதும் பெய்து கொண்டிருந்த மழை இன்று காலையும் தொடர்ந்து பெய்து வருகிறது. இதனையடுத்து சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்று அனைத்து பள்ளிகளும் விடுமுறை

சென்னை மழை நிலவரம்: தமிழ்நாடு வெதர்மேன் கூறும் தகவல்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதை அடுத்து ஆரம்பத்திலேயே அதிக மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

'நோட்டா' நாயகனுக்கு பிரபல கிரிக்கெட் வீரர் வாழ்த்து

அர்ஜுன்ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான 'நோட்டா' திரைப்படம் நாளை முதல் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

'ரஜினியின் 'பேட்ட' செகண்ட் லுக் இதுதான்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'பேட்ட' படத்தின் செகண்ட் லுக் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகவுள்ளதாக வெளிவந்த அறிவிப்பு குறித்து சற்றுமுன் பார்த்தோம்

ரஜினியின் 'பேட்ட' படம் குறித்த முக்கிய அப்டேட்: கார்த்திக் சுப்புராஜ் அறிவிப்பு

ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் 'பேட்ட' படத்தின் படப்பிடிப்பு வாரணாசி அருகே தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது