தயாரிப்பாளர் சங்கத்தை பூட்டி, சாவியை முதல்வரிடம் ஒப்படைக்க முடிவு: எஸ்.வி.சேகர்

  • IndiaGlitz, [Wednesday,December 19 2018]

நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் மீது தமிழக முதல்வரிடம் புகார் அளிக்கவுள்ளதாக நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியபோது, 'இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்தியதில் உள்நோக்கம் உள்ளதாகவும், இளையராஜாவை வைத்து காசு பண்ண வேண்டும் என்பது தான் விஷாலின் நோக்கம்' என்றும் குற்றஞ்சாட்டினார்.

தயாரிப்பாளர் சங்கத்தில் நிர்வாக சீர்கேடு இருப்பதால் இதுகுறித்து நடிகர் விஷால் மீது முதலமைச்சர் பழனிசாமியிடம் புகார் அளிக்க உள்ளதாகவும், சங்கத்தை பூட்டி அதன் சாவியை முதலமைச்சரிடம் வழங்க உள்ளதாகவும் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

சென்னையில் சன்னிலியோன்: ரசிகர்கள் குஷி

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் தமிழில் தற்போது 'வீரமாதேவி' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மேக்கப்மேன் முத்தப்பாவு மறைவுக்கு கமல்ஹாசன் அஞ்சலி

கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான முதல் படமான 'களத்தூர் கண்ணம்மா' படத்தில் அவருக்கு மேக்கப் போட்ட மேக்கப்மேன் முத்தப்பா நேற்று சென்னையில் அவரது இல்லத்தில் காலமானார்.

அஜித் மகனின் 'வேட்டிகட்டு' வீடியோ குறித்து பிரபல நடிகை

கோலிவுட் திரையுலகில் இருக்கும் நட்சத்திரங்களும் சமூக வலைத்தளங்கள் மூலம் பரபரப்பான கருத்துக்களை பதிவு செய்து வரும் நிலையில் மிகச்சில நட்சத்திரங்கள் மட்டுமே சமூக வலைதளங்களில் இல்லாமல் உள்ளனர்.

'சீதக்காதி' படத்தின் முக்கிய ரகசியத்தை வெளியிட்ட விஜய்சேதுபதி

விஜய்சேதுபதியின் 25வது படம் என்ற பெருமையுடன் கூடிய 'சீதக்காதி' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

பிரபல கிரிக்கெட் வீரரின் கேரக்டரில் 'கனா' சிவகார்த்திகேயன்?

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'கனா' திரைப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி நேற்று முடிவடைந்த