ரஜினி என்னை இப்படி அழைத்ததும் உறைந்துவிட்டேன்: 'அருவி' அதிதிபாலன்

  • IndiaGlitz, [Sunday,December 24 2017]

சமீபத்தில் வெளியான சூப்பர் ஹிட் படமான 'அருவி' திரைப்படம் சினிமா ரசிகர்களை மட்டுமின்றி சினிமாக்காரர்களையும் கவர்ந்த ஒரு படம். ரஜினிகாந்த், ஷங்கர் முதல் கிட்டத்தட்ட கோலிவுட் திரையுலகமே இந்த படத்தை பாராட்டிவிட்டது.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக 'அருவி' பட இயக்குனர் அருண்பிரபு மற்றும் நாயகி அதிதிபாலனை  ரஜினிகாந்த் தனது இல்லத்திற்கு அழைத்து இருவருக்கும் தங்க செயின் பரிசளித்ததை கோலிவுட் திரையுலகமே ஆச்சரியத்துடன் பார்த்தது

இந்த நிலையில் அறிமுகமான முதல் படத்திலேயே சுப்பர் ஸ்டார் கையால் தங்க செயினை தனது கழுத்தில்  ஜொலிக்கவிட்டு கொண்டிருக்கும் நடிகை அதிதிபாலன் இதுகுறித்து கூறியபோது, 'சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் எனது நடிப்பை பாராட்டி 'நீதான் அடுத்த ஊர்வசி' என்று கூறியபோது இன்ப அதிர்ச்சியால் நான் உறைந்துவிட்டேன். மேலும் அவர் எங்கள் படக்குழுவினர்களை பாராட்டிவிட்டு ,'ரோலிங் சார்' என்று கூறி தன்னுடைய டிரேட்மார்க் சிரிப்பை உதிர்த்தபோது எங்களுக்கெல்லாம் வேற லெவல் அனுபவம் ஏற்பட்டது' என்று கூறினார்

More News

விஜயகாந்த்-சண்முகப்பாண்டியன் படத்தை இயக்கும் பிரபல இயக்குனர்: பிரேமலதா தகவல்

கேப்டன் விஜயகாந்த் மகனும் நடிகருமாகிய சண்முகப்பாண்டியன் நடித்த இரண்டாவது படமான 'மதுரவீரன்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

பாஸ்கர் ஒரு ராஸ்கல்

அரவிந்தசாமி, அமலாபால் நடிப்பில் சித்திக் இயக்கிய 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு .

ஆர்.கே.நகரில் முதல் சுற்றில் டிடிவி தினகரன் முன்னிலை

சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த தொகுதியில் உள்ள 4 தபால் ஓட்டுக்களில்

'வேலைக்காரன்' முதல் நாள் வசூல் விபரம்

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கிய 'வேலைக்காரன்' திரைப்படம் நேற்று வெளியாகி பெருவாரியான பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில்

சென்னையை அடுத்து மதுரையிலும் நம்ம அணி போட்டியிடும்: ஞானவேல்ராஜா

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகிஸ்தர் சங்க தேர்தலில் போட்டியிடுவதற்காக சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தின் பதவியை ராஜினாமா செய்த ஞானவேல்ராஜா,