மாணவர்கள் கோரிக்கையை 3 ஆண்டுகளுக்கு முன்பே நிறைவேற்றிய முருகதாஸ்

  • IndiaGlitz, [Friday,January 27 2017]

உலகமே வியக்கும் வகையில் இளைஞர்கள், மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஒரு அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தை, அந்த அரசே வெற்றி பெற்றதாக கூறியது இதுவரை வரலாற்றில் இல்லை. அந்த அளவுக்கு இந்த போராட்டம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்த போராட்டத்தின் நடுவே மாணவர்கள் ஏற்படுத்திய இன்னொரு முக்கியமான விழிப்புணர்வு வெளிநாட்டு பானங்களை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என்பதுதான். இந்த கோரிக்கையும் தற்போது தமிழகம் முழுவதும் பரவி வருகிறது. மார்ச் 1ஆம் தேதி முதல் வெளிநாட்டு பானங்களை விற்பனை செய்யப்போவதில்லை என தமிழ்நாடு வணிகர்கள் சங்கம் அறிவித்ததை பார்த்தோம்

இந்நிலையில் இந்த பானங்களால் தமிழகத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து 3 ஆண்டுகளுக்கு முன்பே ஏ.ஆர்.முருகதாஸ் தனது 'கத்தி' படத்தில் கூறியிருப்பார். இதுகுறித்து தற்போது அவர் சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'கத்தி படத்தின் கதை எழுத ஆரம்பத்ததில் இருந்தே வெளிநாட்டு பானங்களை அருந்துவதை நிறுத்திவிட்டதாகவும், தற்போது தன்னுடைய படப்பிடிப்பு தளத்தில் அவ்வகை பானங்களை பயன்படுத்த தடை விதித்துள்ளதாகவும் கூறியுள்ளார். முருகதாஸ் போன்றே மற்ற இயக்குனர்களும் தங்களுடைய படப்பிடிப்பில் வெளிநாட்டு பானங்களை தவிர்க்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.

More News

இளைஞர்கள் போராட்டத்திற்கு உதவிய மீனவர்களுக்கு லாரன்ஸ் செய்த உதவி

உலகமே வியக்கும் வகையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்து, ஜல்லிக்கட்டுக்கான சட்டத்தை இயற்ற வைத்த மாணவர்கள், இளைஞர்களுக்கு பாராட்டுக்கள் தொடர்ந்து குவிந்து வருகிறது. இந்த அறவழி போராட்டம் உலகிற்கே ஒரு வழிகாட்டியாக வருங்காலத்தில் இருக்கும் என்று கருதப்படுகிறது...

காற்று வெளியிட சிங்கள் டீஸர்

காற்று வெளியிட சிங்கள் டீஸர்

லாரன்ஸ் ரசிகர்களுக்கு இன்று ஒரு இன்ப அதிர்ச்சி

சமீபத்தில் முடிந்த மாணவர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பெரும் ஆதரவு கொடுத்த ராகவா லாரன்ஸ் அவர்களுக்கு தமிழகம் முழுவதும் மதிப்பும் மரியாதையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அவரது படம் குறித்த அறிவிப்பு ஒன்று அவருடைய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக வெளியாகியுள்ளது...

திட்டமிட்ட தேதிக்கு முன்பே ரிலீஸ் ஆகும் 'போகன்'

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்த 'போகன்' திரைப்படம் ஏற்கனவே சென்சாரில் 'யூ' சர்டிபிகேட் பெற்று வரும் பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது அனைவரும் அறிந்ததே...

நயன்தாராவுடன் இணைந்து குரல் கொடுக்கும் அனிருத்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் படங்கள் நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் 'மாயா'வின் வெற்றிக்கு பின்னர் நயன்தாரா மீண்டும் நடித்துள்ள திகில் படமான 'டோரா' படத்தின் பாடல்கள் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது...