அஜித்துக்கு பாடினேன் என்று கடைசி வரை தெரியாது: அனுராக் குல்கர்னியின் ஆச்சரிய தகவல்!

  • IndiaGlitz, [Saturday,August 14 2021]

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படத்தின் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த பாடலை பாடிய அனுராக் குல்கர்னி கடைசிவரை இந்த பாட்டை நான் யாருக்காக பாடினேன் என்று தெரியாது என்று பேட்டி அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’நாங்க வேற மாதிரி’ என்ற பாடலை அனுராக் குல்கர்னி என்பவர் பாடினார் என்பது தெரிந்ததே. இந்த பாடல் ரெக்கார்டிங் செய்தபோது ஏற்பட்ட அனுபவம் குறித்து அவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

யுவன் சங்கர் ராஜா அவர்களின் அலுவலத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. உடனடியாக நான் சென்று பார்த்த போது அங்கு யுவன் இல்லை. சவுண்டு இன்ஜினியர்கள் மற்றும் டெக்னிக்கல் கலைஞர்கள் மட்டுமே இருந்தார்கள். எனக்கு ஒரு பாடலை கொடுத்துப் பாட வேண்டும் என்றும் இந்த பாடல் ஒரு ஹீரோவின் எண்ட்ரி பாடல் என்றும் மட்டும் கூறினார்கள். முதலில் ரிகர்சல் பார்த்து அதன் பின் யுவன் சங்கர் ராஜா ஆன்லைனில் வந்து சில கரெக்சன்களை கூறினார். அதன்பின் பாடல் ரிக்கார்டிங் செய்யப்பட்டது. அந்த பாடல் எந்த படத்திற்காக பாடினேன் என்றும். யாருக்காக பாடினேன் என்று எனக்கு தெரியாது.

இந்த நிலையில் ’வலிமை’ படத்தின் பாடல் வெளியாகப் போவதாக அறிவிப்பு வெளியானபோது என்னிடம் பல பத்திரிகையாளர்கள் இந்த பாடலை பாடியது நீங்கள் தான் என்றும் இந்த பாடிய அனுபவத்தை கேட்டார்கள். ஆனாலும் ’வலிமை’ படத்திற்காகத்தான் நான் பாடினேன் என்பது எனக்கு உறுதியாக தெரியாததால் அது பற்றி நான் கூற மறுத்து விட்டேன். அதன்பின்னர் பாடல் வெளியான பிறகுதான் நான் அஜித்துக்காக பாடினேன் என்று தெரிந்ததும் நான் மிகப்பெரிய ஆச்சரியம் அடைந்தேன்’ என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More News

மதுரை ஆதீனத்தின் அடுத்த மாடாதிபதி யார்? நித்யானந்தாவின் கனவு?

மதுரை ஆதீனத்தின் 292 ஆவது மடாதிபதி அருணகிரிநாதர் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

யாரெல்லாம் 3 ஆவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும்?

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நபர்கள் 3 ஆவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) வலியுறுத்தி இருக்கிறது

டிவி தொடரில் வில்லியாக மிரட்டும் தனுஷ் பட நாயகி!

சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு வரும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். சமீபத்தில் கூட நடிகை நமீதா சின்னத்திரைக்கு அறிமுகமாக உள்ளார்

சின்னத்திரையில் மாஸ்-ஆக ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகை நமீதா.....!

தனியார் தொலைக்காட்சியான ஜீ-தமிழில் ஒளிபரப்பாகின்ற சீரியல் மூலம் நடிகை நமீதா ரீ-என்ட்ரீ கொடுக்கவுள்ளார்.

இறந்த தாத்தா உடலை பிரிட்ஜுக்குள் வைத்த பேரன்....? ஏன் இப்படி செய்தார்....?

தெலுங்கானா மாநிலத்தில், பர்காலா என்ற இடத்தில் தனது தாத்தாவுடன் வாடகை வீடு எடுத்து வசித்து வருபவர் தான் நிகில்.