'விண்ணை தாண்டி வருவாயா' படத்தை மிஸ் செய்துவிட்டேன்: இளம் நடிகர் வருத்தம்

  • IndiaGlitz, [Monday,June 20 2022]

'விண்ணை தாண்டி வருவாயா’ படத்தில் நான்தான் நடித்திருக்க வேண்டும் என்றும் அந்த படத்தை நான் மிஸ் செய்து விட்டேன் என்றும் இளம் நடிகர் ஒருவர் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

சிம்பு, த்ரிஷா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ’விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற திரைப்படம் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிம்பு, த்ரிஷா மட்டுமின்றி கௌதம் மேனனுக்கும் இந்த படம் திரையுலக வாழ்வில் திருப்புமுனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் இந்த படத்தின் கேரக்டர்களான கார்த்திக் மற்றும் ஜெஸ்ஸி அனைவர் மனதிலும் ஆழமாக பதிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழ் திரையுலகின் இளம் நடிகர்களில் ஒருவரான ஜெய் சமீபத்தில் அளித்த பேட்டியில் ’விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் நடிக்க எனக்கு தான் முதலில் வாய்ப்பு கிடைத்தது என்றும் ஆனால் நான் அதை மிஸ் செய்துவிட்டேன் என்றும் கூறியுள்ளார். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் ஜெய் நடித்திருந்தால் அவருடைய திரையுலக மார்க்கெட் உச்சத்திற்கு சென்று இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.