இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்: விஜய் ரசிகருக்கு மாளவிகா மோகனன் பாராட்டு

  • IndiaGlitz, [Monday,April 27 2020]

விஜய் நடித்த மாஸ்டர்' படம் குறித்து விஜய் ரசிகர் ஒருவர் கார்ட்டூனை ஒன்றை டுவிட்டரில் பதிவு செய்திருந்த நிலையில் அந்த பதிவில் 'மாஸ்டர்' குழுவினர் ஊரடங்கில் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். அதில் மாளவிகா மோகனன் மட்டும் சமைப்பது போன்றும் மற்றவர்கள் பொழுதுபோக்கு அம்சத்தில் ஈடுபட்டிருந்தது போன்றும் வடிவமைத்திருந்தார்.

இந்த கார்ட்டூனுக்கு மாளவிகா மோகனன் தனது டுவிட்டர் பதிவில் கடும் கண்டனத்த்தை தெரிவித்ததோடு ஒரு கற்பனையான பாத்திரம் வீட்டில் இருந்தால் கூட, பெண்ணின் வேலை என்பது சமையல் மட்டும்தானா? இதுதான் பாலின சமன்பாடா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். ஆனால் இந்த டுவீட்டுக்கு விஜய் ரசிகர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்ததால் மாளவிகா அந்த டுவீட்டை நீக்கிவிட்டார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு விஜய் ரசிகர் கிட்டத்தட்ட அதேபோன்ற பதிவு ஒன்றை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். ஆனால் அதில் மாளவிகா மோகனன் சமையல் செய்வதற்கு பதில் புத்தகம் படிப்பது போல் உள்ளது. இந்த படத்தை பார்த்த மாளவிகா மோகனன், ‘நான் இதைத்தான் எதிர்பார்த்தேன். இதனை நான் மிகவும் விரும்புகிறேன். ஆனால் நான் புத்தகம் அதிகம் படிப்பேன் என்று எப்படி தெரிந்தது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மாளவிகா மோகனனின் இந்த டுவிட்டிற்கு அவரை வசைபாடிய அதே விஜய் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

More News

2025ஆம் ஆண்டு வரை 'வொர்க் ஃப்ரம் ஹோம்' தான்: டிசிஎஸ் அதிரடி முடிவு?

கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டிருப்பதால் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யும் 'வொர்க் ஃப்ரம் ஹோம்' முறையை கையாண்டு வருகின்றன

தமிழகத்தில் இன்று 52 பேர்களுக்கு கொரோனா: அபாய கட்டத்தில் சென்னை

தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 52 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,937ஆக உயர்ந்துள்ளதாகவும்

கொரோனா பாதிப்பால் அதிர்ச்சி: 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பது மட்டுமின்றி அவர்களது மன அழுத்தத்தை போக்குவதற்கும்

துல்கர் சல்மானுக்கு ஆதரவாக கருத்த தெரிவித்த தமிழ் நடிகர்

மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடித்து தயாரித்த 'வரனே அவஷ்யமுண்டு' படத்தில் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைத்தது சர்ச்சையானதால், தமிழ் மக்களிடம் துல்கர் சல்மான் மன்னிப்பு கேட்டுள்ளார்

தாத்தாவை புதைக்க குழி தோண்டிய பேரன் திடீர் மரணம்: அருகருகே புதைக்கப்பட்ட சோகம்

உத்தர பிரதேச மாநிலத்தில் உயிரிழந்த தாத்தாவை அடக்கம் செய்ய அவரது பேரன் குழி தோண்டியபோது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார்