பயமும் இல்லை, நம்பிக்கையும் இல்லை: ரஜினியை இயக்குவது குறித்து கார்த்திக் சுப்புராஜ்

  • IndiaGlitz, [Monday,April 02 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'காலா' மற்றும் '2.0' ஆகிய இரண்டு படங்களும் இந்த ஆண்டு ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு வெகுவிரைவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த படத்தை இயக்குவது குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மனம் திறந்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

ரஜினியின் படத்தை இயக்குவதில் மிகுந்த மகிழ்ச்சி. அவருடன் பணிபுரிய யாருக்குத்தான் ஆசை இருக்காது. அவரை இயக்க எனக்கு பயம் இல்லை. ஆனால் அதே நேரத்தில் முழு நம்பிக்கையும் இல்லை. அவரது ரசிகர்களை திருப்தி செய்ய வேண்டும் என்ற பெரிய பொறுப்பு என்னிடத்தில் உள்ளது. மேலும் ரஜினிகாந்த் அவர்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளதால் இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தின் படப்பிடிப்பை முடிக்க வேண்டிய நிலையும் எனக்கு உள்ளது.

ரஜினிகாந்த் அவர்கள் ஒவ்வொரு படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார். எனது படத்திலும் அவர் வித்தியாசமான,சிறப்பான நடிப்பை தருவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார். 

ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது.

More News

6 வருட சம்பளத்தை சச்சின் என்ன செய்தார் தெரியுமா?

இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் கடந்த 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் சமீபத்தில் முடிந்தது.

சிஎஸ்கே அணிக்கு விக்னேஷ் சிவன் செய்த உதவி

இரண்டு ஆண்டுகள் தடைக்கு பின்னர் தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு மீண்டும் களமிறங்கவுள்ள நிலையில்

கமல், ரஜினி உள்பட திரையுலகினர்களுக்கு ஸ்டெர்லைட் அளித்த விளக்கங்கள்

ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என அந்த பகுதி மக்கள் இரவும் பகலும் தீவிரமாக போராடி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி திரையுலகில் இருந்தும் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக குரல்கள் எழுந்தன.

ரஜினி, கமல் படங்களை திரையிட விடமாட்டோம்: சொன்னது யார் தெரியுமா?

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரின் படங்களையும் கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என கன்னட சலவளி வாட்டாள் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மெரீனாவில் திடீரென மூடப்பட்ட சர்வீஸ் சாலை: நடைப்பயிற்சி செல்வோர் அதிர்ச்சி

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசு மீது தமிழக மக்கள் கடும் கோபத்தில் உள்ள நிலையில் எந்த நேரத்திலும் மீண்டுமொரு மெரீனா போராட்டம் நடைபெற வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.