close
Choose your channels

பயமும் இல்லை, நம்பிக்கையும் இல்லை: ரஜினியை இயக்குவது குறித்து கார்த்திக் சுப்புராஜ்

Monday, April 2, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'காலா' மற்றும் '2.0' ஆகிய இரண்டு படங்களும் இந்த ஆண்டு ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு வெகுவிரைவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த படத்தை இயக்குவது குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மனம் திறந்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

ரஜினியின் படத்தை இயக்குவதில் மிகுந்த மகிழ்ச்சி. அவருடன் பணிபுரிய யாருக்குத்தான் ஆசை இருக்காது. அவரை இயக்க எனக்கு பயம் இல்லை. ஆனால் அதே நேரத்தில் முழு நம்பிக்கையும் இல்லை. அவரது ரசிகர்களை திருப்தி செய்ய வேண்டும் என்ற பெரிய பொறுப்பு என்னிடத்தில் உள்ளது. மேலும் ரஜினிகாந்த் அவர்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளதால் இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தின் படப்பிடிப்பை முடிக்க வேண்டிய நிலையும் எனக்கு உள்ளது.

ரஜினிகாந்த் அவர்கள் ஒவ்வொரு படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார். எனது படத்திலும் அவர் வித்தியாசமான,சிறப்பான நடிப்பை தருவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார். 

ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment