சூனியம் வச்சிருக்கேன்....எனக்கு ஓட்டு போடலைனா, கை, கால் வராது....! பயமுறுத்தும் திமுக வேட்பாளர்....!

  • IndiaGlitz, [Thursday,April 01 2021]

கடவுள் மறுப்பு, சாதி எதிர்ப்பு, நாத்திகம் போன்றவற்றை வெளிப்படுத்திக்கொள்ளும் திமுக-வில், வேட்பாளர் ஒருவர் மக்களை அச்சுறுத்தும் தோணியில் வாக்கு கேட்டுள்ளார்.

சட்டமன்ற தேர்தல் பிரச்சார களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஒவ்வொரு கட்சி வேட்பாளர்களும் வித்தியாசமான முறையில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். தோசை சுடுவது, காஃபி போட்டு கொடுப்பது, டென்னிஸ், கபடி விளையாடுவது, மகளிருக்கு துணி துவைத்து கொடுப்பது,அயர்ன் செய்வது,அடுக்கு மொழியில் வசனங்கள் பேசுவது மற்றும் உருகி எமோஷனல் வாக்குகள் சேர்ப்பது என பல பாணிகளை கையாண்டு வருகின்றனர்.

அந்தவகையில் கடலூர் தொகுதி, திமுக வேட்பாளர் ஐயப்பன் மக்களை மிரட்டி வாக்குகளை கேட்டுள்ளார். பிரச்சாரத்தில், கடலூர் மக்களுக்கு கேரள மந்திரவாதிகள் மூலம் சூனியம் வைத்துள்ளேன், எங்களுக்கு ஓட்டுப்போடவில்லை என்றால் உங்களுக்கு உடம்பு சரியில்லாமல் போய்விடும். யார் விருப்பத்துடன் பணம் கொடுத்தாலும் வாங்கிக்கொண்டு, உதயசூரியனுக்கு ஓட்டுப்போட்டு விட்டு அதை செலவிடுங்கள்.

திமுக ஆட்சியின்(2006-2011) போது ஐயப்பன் திமுகவில் எம்எல்ஏ-வாக இருந்தார். பின் உட்கட்சி பூசலால் அம்மா இருந்தபோது, அதிமுகவில் இணைந்து மாவட்ட அவைத்தலைவராகவும் இருந்துள்ளார். ஜெ-வின் இறப்பிற்கு பின் ஓபிஎஸ்- ஈபிஎஸ் இரட்டை அணியாக பிரிந்தபோது, பன்னீர்செல்வம் அணியில் இருந்தார்.
அங்கும் புறக்கணிப்பு வந்ததால் மீண்டும் திமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனா… அச்சமூட்டும் பாதிப்பு எண்ணிக்கை!

இந்தியாவில் கடந்த வருடம் மார்ச் மாதத்தில் தலைத்தூக்க தொடங்கிய கொரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்து வந்தது.

ஷங்கர் மீது லைகா தொடுத்த வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வந்த திரைப்படம் 'இந்தியன் 2'.

ரஜினியை 'தலைவா' என அழைத்து வாழ்த்து கூறிய பிரதமர் மோடி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சற்றுமுன்னர் இந்திய திரை உலகின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே

தாதா சாகேப் பால்கே விருது: ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஈபிஎஸ், முக ஸ்டாலின்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சற்று முன்னர் மத்திய அரசு திரை உலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை அளித்தது என்பது தெரிந்ததே. மத்திய அமைச்சர் ஜவடேகர் அவர்கள் சற்று முன் இந்த

தாதா சாகேப் விருது, ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம்: கமல்ஹாசன்

இந்திய திரை உலகின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சற்று முன்னர் அறிவிக்கப்பட்டது. அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள்