close
Choose your channels

எனக்கு நேசமணின்னா யாருன்னே தெரியாது: ராதாரவி

Thursday, May 30, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக அளவில் டிரெண்ட் ஆகி கொண்டிருக்கும் 'பிரெண்ட்ஸ்' நேசமணிக்கு பெயிண்டிங் காண்ட்ராக்ட் கொடுத்ததே ராதாரவி என்பதை யாரும் மறந்திருக்க முடியாது. இந்த நிலையில் நேசமணியின் டிரெண்ட் குறித்து ராதாரவி கூறியபோது, 'ஐயோ, ரெண்டு நாளா எல்லாருமே இதையேதான் கேக்குறாங்க. இது என்னய்யா பெரிய அக்கப்போரா இருக்கு?. எனக்கு நேசமணின்னா யாருன்னு தெரியவே தெரியாதுங்க' என்று கூறியுள்ளார்.

அதேபோல் பழம்பெரும் அரசியல்வாதியும், 'எல்.கே.ஜி' படத்தில் நடித்தவருமான நாஞ்சில் சம்பத் 'நேசமணி' குறித்து கூறியபோது, 'எனக்கு நேசமணி என்றால் நினைவுக்கு வருபவர் குமரி மாவட்டத்தை சேர்ந்த நேசமணி தான் என்றும், மண்ணின் விடுதலைக்காக போராடி பல ஆபத்துக்களை சந்தித்து குமரிக் கண்டம் தமிழகத்துடன் இணைய எல்லா வகையிலும் காரணமாக இருந்தவர் தான் நேசமணி என்றும், எனக்கு அந்த நேசமணியை தவிர வேறு யாரையும் தெரியாது' என்றும் கூறினார்.

ஆனால் நடிகர் வடிவேலு குறித்து நாஞ்சில் சம்பத் கூறியபோதும் 'தமிழ் சினிமாவில் வடிவேலுவின் இடத்தை யாராலும், நிரப்ப முடியாது. தமிழ்நாட்டு மக்களின் மனதை கொள்ளை கொண்டவர் அவர்' என்று புகழ்ந்தார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment