ராணி பத்மினி யார் என்றே எனக்கு தெரியாது: தீபிகா படுகோனே

  • IndiaGlitz, [Tuesday,January 30 2018]

சஞ்சய் லீலா பன்சாலி நடிப்பில் தீபிகா படுகோனே நடித்த 'பத்மாவத்' திரைப்படம் மிகப்பெரிய போராட்டத்திற்கு பின் கடந்த வாரம் வெளியானது. நான்கு மாநிலங்களில் இந்த படம் வெளிவரவில்லை என்ற போதிலும் இந்தியாவில் ரூ.100 கோடியும், உலகம் முழுவதும் ரூ.200 கோடியும் இந்த படம் வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்க கமிட் ஆகும் முன் தனக்கு ராணி பத்மினி என்றால் யார் என்றே தெரியாது என்றும் ஏனெனில் தான் ஒரு வரலாற்று மாணவி அல்ல என்றும் தீபிகா படுகோனே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இந்த படத்தின்  கதையை கேட்டபின்னர் தான் ராணி பத்மினி குறித்து படித்து தெரிந்து கொண்டதாகவும், அந்த கதையை படித்து முடித்தவுடன் பத்மினியாகவே மாறிவிட்டதாகவும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்

மேலும் படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பு இருந்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றது குறித்து தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்று கூறிய தீபிகா  . மீண்டும் வரலாற்று கேரக்டரில் நடிக்கும் எண்ணம் இல்லை என்றும் இருப்பினும் சினிமாவில் எதுவேண்டுமானாலும் நடக்க வாய்ப்பு இருப்பதாகவும், தன்னை பாதிக்கும் வரலாற்று கதையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் யோசிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

More News

தமிழ்ப்புத்தாண்டு பார்ட்டி வைப்பாரா வெங்கட்பிரபு?

வெங்கட்பிரபு இயக்கி வரும் 'பார்ட்டி' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாக

ரஜினி, கமலை அடுத்து லைகாவுடன் கைகோர்க்கும் பிரபல இயக்குனர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள '2.0' படத்தை சுமார் ரூ.450 கோடியில் தயாரித்துள்ள லைகா, நிறுவனம் இந்த படத்தை வரும் ஏப்ரலில் வெளியிட திட்டமிட்டுள்ளது.

பாகிஸ்தானை பந்தாடிய இளம் இந்திய அணிக்கு கிரிக்கெட் ஜாம்பவான் வாழ்த்து

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய அரையிறுதி போட்டி நடைபெற்றது.

'தல 59' படத்தின் இயக்குனர் குறித்த மாஸ் தகவல்

இயக்குனர் சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக தல அஜித் இணைந்த 'விசுவாசம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரியில் தொடங்கவுள்ளது என்பதையும்

ஜீவா-நிக்கி கல்ராணியின் சாதனைக்கு ஏற்பட்ட சோதனை

பிப்ரவரி 9ஆம் தேதி ஜீவா, நிக்கி கல்ராணி உள்பட பலர் நடித்த சுந்தர் சியின் 'கலகலப்பு 2' ரிலீஸ் ஆகவுள்ளது. ஆனால் அதே தேதியில் ஜீவா, நிக்கி கல்ராணி நடித்த இன்னொரு படமான 'கீ' திரைப்படமும் ரிலீஸ் ஆகும்