மூன்று படங்களும் தோல்வி, இனிமேல் சினிமாவை இயக்க மாட்டேன்: கமல் பட இயக்குனர் அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,July 23 2022]

கமல்ஹாசன் படம் உள்பட மூன்று படங்களை இயக்கிய இயக்குனர் தனது மூன்று படங்களும் எதிர்பார்த்த பலனை தரவில்லை என்பதால் இனிமேல் சினிமாவை இயக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் பிசி ஸ்ரீராம் என்பதும் தேசிய விருது பெற்ற இவர் பல வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விக்ரம் நடித்த ’மீரா’ கமல்ஹாசன் நடித்த ’குருதிப்புனல்’ மற்றும் ’வானம் வசப்படும்’ ஆகிய மூன்று படங்களை இவர் இயக்கியுள்ளார். இந்த மூன்று விமர்சனரீதியான பாராட்டுக்களை பெற்ற போதிலும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த பி சி ஸ்ரீராம் இதுவரை நான் இயக்குனராக வருவதற்கு சில முயற்சிகள் செய்தேன், ஆனால் நல்ல பலன் வரவில்லை. ஒளிப்பதிவு வேறு சினிமா வேறு என்பதை நான் புரிந்து கொண்டேன். ஒரு சினிமாவை இயக்குவதற்கு அனைத்து பிரிவுகளையும் கையாளும் திறமை வேண்டும், அந்த திறமை எனக்கு இல்லை. அதனால்தான் நான் இயக்கிய ’குருதிப்புனல்’ உள்ளிட்ட மூன்று படங்களும் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை. எனவே இனி சினிமாவை இயக்கும் எண்ணம் இல்லை என்று கூறினார்.

மேலும் என் மனதுக்குப் பிடித்த கதையாக இருந்தால் மட்டுமே ஒளிப்பதிவு செய்வேன் என்றும், என்னிடம் கதை முழுவதையும் சொன்ன பிறகு தான் நான் அந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்வது குறித்து முடிவு செய்வேன் என்றும் அவர் தெரிவித்தார்.

More News

தேசிய விருது பெற்ற சூர்யா ரசிகர்களுக்கு கலைப்புலி எஸ் தாணுவின் அசத்தல் பரிசு!

நடிகர் சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' என்ற திரைப்படம் ஐந்து தேசிய விருதுகளை பெற்றது என்பதும் குறிப்பாக சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது என்பதையும் பார்த்தோம் 

பணம், பெயர், பெரிய அரசியல்வாதியை பார்த்தவன் நான், ஆனாலும் சந்தோஷம் இல்லை: ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்த ஆன்மீக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, 'பணம், புகழ் மற்றும் பெரிய பெரிய அரசியல்வாதிகளை நான் பார்த்தவன்

என் ஜோதிகாவிற்கு தேசிய விருதை அன்புடன் உரித்தாக்குகிறேன்: சூர்யாவின் நெகிழ்ச்சி அறிக்கை

 நேற்று 68வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் சிறந்த நடிகருக்கான விருது சூர்யாவுக்கு கிடைத்தது என்பது மட்டுமின்றி அவர் நடித்த 'சூரரைப்போற்று' திரைப்படத்திற்கு மொத்தம் ஐந்து விருதுகள்

நடன மாஸ்டர் தம்பதியருக்கு இரண்டாவது குழந்தை: திரையுலகினர் வாழ்த்து!

பிரபல நடன இயக்குநர்கள் ஷோபி மாஸ்டர்  மற்று லலிதா ஷோபி மாஸ்டர் தம்பதியருக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதை அடுத்து திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

ஒரு நாள் நீ பெரிதாக  சாதிப்பாய்... தேசிய விருது பெற்ற ஜிவி பிரகாஷின் நெகிழ்ச்சியான பதிவு!

68வது தேசிய விருது சற்று முன் வெளியான நிலையில் அதில் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவான 'சூரரைப்போற்று' திரைப்படத்திற்கு 5 விருதுகள் கிடைத்துள்ளது