கமலுடன் இணைப்பு குறித்து ரஜினிகாந்த் அதிரடி பேட்டி!

  • IndiaGlitz, [Tuesday,November 19 2019]

வரும் சட்டமன்ற தேர்தலில் இரண்டு வலுவான திராவிட கட்சிகளின் கூட்டணியை எதிர்த்து இரண்டு திரையுலக ஜாம்பவான்களான கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் எதிர்த்து போட்டியிடவுள்ளனர். இந்த நிலையில் கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் தனித்தனியே போட்டியிட்டால் திராவிட கட்சிகளுக்கு எதிரான ஓட்டுக்கள் பிரியும் என்றும் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

சற்றுமுன் ரஜினியுடன் இணைய தயார் என்றும், ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம் என்றும் தமிழகத்தின் மேம்பாட்டிற்காக சேர்ந்து பயணிக்க வேண்டும் என்றால் பயணிப்போம் என்று கமல்ஹாசன் பேட்டியளித்திருந்தார்.

இந்த நிலையில் சற்றுமுன் கோவா செல்ல சென்னை விமான நிலையத்திற்கு வந்த ரஜினியுடம் கமல் கட்சியுடன் கூட்டணி சேர்வீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், ‘மக்களின் நலனுக்காக, நானும், கமலும் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம்’ என்று கூறினார். மேலும் தனது அதிசயம் குறித்த பேச்சுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்தது அவரது தனிப்பட்ட கருத்து, அதற்கு பதில்கூற விரும்பவில்லை என்றும் ரஜினிகாந்த் கூறினார்.

More News

காயத்ரி ரகுராமுக்கு ஏற்பட்ட திடீர் இழப்பு!

நடிகை காயத்ரி ரகுராம் கடந்த இரண்டு நாட்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு எதிராக காரசாரமாக டுவீட்டுக்களை பதிவு செய்தார். ஒருசில டுவிட்டுக்களில் நேரடி சவாலும் விடுத்திருந்தார்.

ரஜினி சொன்ன 'அதிசயம்' குறித்து கமல்ஹாசன் கருத்து:

பொது மேடையிலோ அல்லது செய்தியாளர்களின் பேட்டியிலோ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரே ஒரு வார்த்தை சொன்னால் கூட போதும், அது ஊடகங்களுக்கு ஒரு வாரம் தீனி போடும்

வெற்றிடம் குறித்து நடிகர் விவேக்கின் நகைச்சுவை பதில்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெற்றிடம் குறித்த கருத்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. ரஜினிகாந்த் ஆரம்பித்த இந்த வெற்றிடம் குறித்த கருத்தை சிலர் ஆதரிக்கவும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தும்

காதல் தோல்வியால் மன உளைச்சல்: பாகிஸ்தானுக்கு பாதை மாறி சென்ற ஐதராபாத் இளைஞர்!

ஐதராபாத்தை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் காதல் தோல்வியால் மனம் உடைந்து பாகிஸ்தானுக்கு தெரியாமல் சென்று சிக்கிக் கொண்டதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

திருடுவதற்காக தினமும் வேலூரில் இருந்து சென்னை வரும் இளம்பெண்: போலீசாரிடம் சிக்கிய கதை

தினமும் ஆயிரக்கணக்கானோர் சென்னைக்கு வேலை நிமித்தமாக ரயிலில் வந்து கொண்டிருக்கும் நிலையில், ஒரு இளம்பெண் தினமும் வேலூரிலிருந்து சென்னைக்கு திருடுவதற்காக வந்துள்ளார்