ஸ்டாலினை தலைவராக ஏற்க தயார்: அழகிரியின் அந்தர் பல்டி

  • IndiaGlitz, [Thursday,August 30 2018]

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி மீண்டும் கட்சியில் சேர்த்து கொள்ளப்படுவார் என்று கூறப்பட்டது. ஆனால் ஸ்டாலினிடம் இருந்து அழைப்பு ஏதும் வராததால் தனது பலத்தை நிரூபிக்க வரும் செப்டம்பர் 5ஆம் தேதி அமைதி பேரணி நடத்தவுள்ளதாகவும், அதில் சுமார் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்றும் அழகிரி பேட்டியளித்தார்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மு.க.அழகிரி தன்னை மீண்டும் திமுகவில் இணைத்து கொண்டால் ஸ்டாலின் தலைமையை ஏற்று செயல்பட தயாராக இருப்பதாக தெரிவித்தார். தன்னை கட்சியில் சேர்க்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இரண்டு நாட்களுக்கு முன் பேட்டியளித்த அழகிரி தற்போது திடீரென அந்தர்பல்டி அடித்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தனை மீண்டும் கட்சியில் சேர்க்க மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் அழகிரியை கட்சியில் இணைக்க ஸ்டாலின் தயக்கம் காட்டி வருவதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

More News

சூர்யாவின் என்.ஜி.கே' தீபாவளி ரிலீஸா? அதிகாரபூர்வ தகவல்

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'என்.ஜி.கே. திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கும் வரும் என்று சூர்யாவின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்

மனம் மாறிய நித்யா: பிக்பாஸ் செய்த ஒரே உருப்படியான விஷயம்

கடந்த இரண்டு மாதங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர எத்தனையோ முயற்சி எடுத்தும் தோல்வியில்தான் முடிந்தது. கடைசியில் மகத்தின் வெளியேற்றமும்,

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியா? கமல் பதில்

திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய இரண்டு தொகுதிகளின் எம்.எல்.ஏக்கள் காலமானதை அடுத்து இந்த இரு தொகுதிகளிலும் விரைவில் இடைத்தேர்தல் வரவுள்ளது.

நான் அப்பா ஆயிட்டேன்: உணர்ச்சிவசப்பட்ட செண்ட்ராயன்

பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்களில் ஒருவராகிய செண்ட்ராயன், அப்பாவி போல் தெரிந்தாலும் பல விவரமானவர்களை மீறி மக்கள் மனதில் இடம்பிடித்து வருகிறார். 70 நாட்களையும் தாண்டி அவர் பிக்பாஸ் வீட்டில்

பிரபுதேவாவின் அடுத்த பட டைட்டில், தயாரிப்பாளர் அறிவிப்பு

பிரபுதேவா நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'லஷ்மி' திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இன்று அவர் நடிக்கவுள்ள புதிய படம் ஒன்றின் பூஜை சற்றுமுன் சென்னையில் நடந்தது.