நான் முதல்வராக கூட வாய்ப்பு உள்ளது: நாஞ்சில் சம்பத்

  • IndiaGlitz, [Tuesday,August 22 2017]

அதிமுகவின் இரண்டு அணிகள் இணைந்தால் ஆட்சி மேலும் வலுப்பெறும் என்று அனைவரும் நினைத்த நிலையில் தற்போதுதான் ஆட்சிக்கு மேலும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
ஓபிஎஸ்-க்கு துணை முதல்வர் மற்றும் மாபா பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவி கொடுத்ததை கடுமையாக எதிர்க்கும் தினகரன் அணியின் முக்கிய தலைவரான நாஞ்சில் சம்பத் இதுகுறித்து கூறியபோது, 'இந்த ஆட்சி 123 எம்.எல்.ஏக்களின் ஆதரவோடு நல்லபடியாக சென்று கொண்டிருந்தபோது கட்சிக்கு துரோகம் செய்தவர்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அழைத்து கொண்டது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். மேலும் இது எங்கள் ஆட்சி என்றும், இந்த ஆட்சியை நாங்கள் எந்த காரணத்தை கொண்டும் கலைக்க மாட்டோம் என்றும் நாஞ்சில் சம்பத் கூறினார்
முதல்வரை மட்டுமே மாற்ற வேண்டும் என்பது தங்கள் கோரிக்கை என்று கூறிய நாஞ்சில் சம்பத் அவர்களிடம் நிருபர்கள் யார் புதிய முதல்வராக பதவியேற்பார் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ''அது நானாக கூட இருக்கலாம்' என்று கூறினார். தினகரனின் அறுவை சிகிச்சை ஆரம்பமாகிவிட்டது என்றும் இனி தினந்தோறும் பத்திரிகையாளர்களுக்கு நல்ல தீனி கிடைக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

More News

அஜித்திடம் இருந்து கற்று கொள்ள வேண்டியது இன்னும் நிறைய உள்ளது: 'விவேகம்' கலை இயக்குனர் மிலன்

ஒரு சர்வதேச உளவாளி படத்தை சர்வதேச தரத்துடன் காட்சியில் கொண்டு வருவது அவ்வளவு எளிது இல்லை. சர்வதேச தரத்தை கொண்டுவர கதைக்கு தகுந்தவாறும் கேரக்டர்களுக்கு தகுந்தவாறும் தொழில்நுட்ப கலைஞர்களின் அதிகபட்ச உழைப்பு தேவைப்படும்.

கமல்ஹாசனுடன் விவசாய சங்க நிர்வாகிகள் சந்திப்பு

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் அதிரடி அரசியல் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.

இதுதான் 'விவேகம்' படத்தின் கதையா?

தல அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாகிய 'விவேகம்' ரிலீஸ் ஆக இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில் இந்த படம் குறித்த செய்திகள் ஒருசில மணி நேரத்திற்கு ஒருமுறை வெளிவந்து பரபரப்பை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.

மாலத்தீவில் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படப்பிடிப்பு

மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் 'பாஸ்கர் தி ராஸ்கல்'.

ஹேப்பி பர்த்டே சென்னை: இன்று சென்னையின் 378வது பிறந்த நாள்

இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும், தமிழகத்தின் தலைநகருமான சென்னைக்கு இன்று 378 வயது ஆகிறது.