ரூ.100க்கு பதில் ரூ.500. வள்ளலாக வாரி வழங்கிய ஏடிஎம்

  • IndiaGlitz, [Monday,December 26 2016]

நாட்டில் உள்ள பெரும்பாலான ஏடிஎம்.கள் இயங்காமல் முடங்கி இருக்கும் நிலையில் ஐதராபாத் விமான நிலையத்தில் உள்ள ஏடிஎம் ஒன்றில் ரூ.100க்கு பதிலாக ரூ.500ஐ வள்ளல் போல் வாரி வழங்கியதால் ஒருசில நிமிடங்களில் ரூ.8 லட்சம் பறிபோனது.

ஐதராபாத் சம்ஷாகாத் என்ற பகுதியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் உள்ள கொடாக் மகேந்திரா வங்கி ஏ.டி.எம்.மில் 100 ரூபாய்க்கு பதிலாக தவறுதலாக 500 ரூபாய் நோட்டுகள் வந்துள்ளது. இந்த ஏடிஎம்-ல் பணம் எடுத்த ஒருவர் ரூ.2500 எடுத்த போது ஒரு 2000 ரூபாய் நோட்டும் ஐந்து 100 ரூபாய் நோட்டுக்களும் வருவதற்கு பதிலாக, ஒரு 2000 ரூபாயும் ஐந்து 500 ரூபாயும் என ரூ.4500 வந்துள்ளது

இந்த வாடிக்கையாளர் இதை உடனடியாக வங்கிக்கு தெரிவிக்காமல் அருகில் இருந்த நபர்களிடம் கூறினார். உடனே அங்கிருந்த பலர் முண்டியடித்து கொண்டு அந்த ஏடிஎம்-இல் பணம் எடுத்தனர். இதனால் ஒருசில நிமிடங்கள் ஏடிஎம்-இல் இருந்த பணம் முழுவதும் காலியானது.

இதுகுறித்து தகவல் அறிந்த வங்கி அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அந்த குறிப்பிட்ட ஏடிஎம்-ஐ சோதனை செய்ததில் ரூ.100 நோட்டுக்கள் வைக்க வேண்டிய இடத்தில் ரூ.500 வைக்கப்பட்டிருந்ததால் இந்த தவறு நடந்துள்ளதாக கண்டறிந்தனர். மேலும் இழந்த ரூ.8 லட்சம் தொகையும் சம்பந்தப்பட்ட வங்கிகளுடன் தொடர்பு கொண்டு மீட்கப்படும் என்றும் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

More News

இன்று முதல் ஆஸ்கர் வின்னரின் மேற்பார்வையில் ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் வரும் ஜனவரி அல்லது பிப்ரவரியில் இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தடுத்த வாரங்களில் அதிமுக, திமுக பொதுக்குழு கூட்டங்கள்

தமிழகத்தின் இருபெரும் கட்சிகளாக விளங்கி வரும் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளின் பொதுக்குழு கூட்டங்கள் அடுத்தடுத்து நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகை தமன்னாவிடம் மன்னிப்பு கேட்டார் இயக்குனர் சுராஜ்

'கத்திச்சண்டை' இயக்குனர் சுராஜ், அளித்த ஒரு வீடியோ பேட்டியில் நடிகைகளின் உடை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் தெரிவித்த கருத்து நடிகைகள் மத்தியில் பெரும் கோப அலைகளை ஏற்படுத்தியது.

நயன்தாராவை அடுத்து சுராஜை வெளுத்து வாங்கிய தமன்னா

நடிகைகள் பணத்திற்காக எவ்வளவு கிளாமராகவும் நடிக்க தயங்குவதில்லை என்ற சர்ச்சைக்குரிய கருத்தை கூறிய 'கத்திச்சண்டை' இயக்குனர் சுராஜூக்கு நடிகை நயன்தாரா கடும் கண்டனங்கள் தெரிவித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் நயன்தாராவை அடுத்து தற்போது இந்த படத்தின் நாயகியான தமன்னாவும் வெளுத்து வாங்கியுள்ளார்.

பிரபல இயக்குனருக்கு சாட்டையடி பதில் கொடுத்த நயன்தாரா

பிரபல இயக்குனர் சுராஜ் இயக்கிய 'கத்திச்சண்டை' சமீபத்தில் வெளிவந்து கலவையான விமர்சனங்கள் பெற்று திரையரங்குகளில் ஓடி வருகின்றனர்.