கணவர் கொடுமையால் தற்கொலை செய்த சாப்ட்வேர் எஞ்சினியர்: வைரலாகும் வீடியோ

  • IndiaGlitz, [Saturday,June 27 2020]

தெலங்கானா மாநிலத்தில் உள்ள சாப்ட்வேர் எஞ்சினியர் ஒருவர் தனது கணவரின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்ப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது இதுகுறித்த சிசிடிவி வீடியோ ஒன்று வைரலாகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஷம்ஷாபாதின் ரல்லாகுவா என்ற பகுதியில், சாப்ட்வேர் எஞ்சினியராக பணிபுரிந்து வந்தவர் லாவண்ய லஹிரி. இவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தனது கணவர் வெங்கடேஷ்வரலு செய்த சித்ரவதைகளை குறிப்பிட்டு விட்டு கடந்த வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.

கடந்த 2012ஆம் ஆண்டு, தனியார் ஏர்லைன் நிறுவனத்தில் பைலட்டாக பணிபுரியும் வெங்கடேஸ்வரலுவைக் காதல் திருமணம் செய்துகொண்ட லாவண்யாவுக்கு குழந்தை இல்லாத என்பதால் அவரது கணவரும் கணவரின் குடும்பத்தார்களும் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல நாட்கள் துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் மகளின் தற்கொலை செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்து அவரது வீட்டிற்கு சென்ற லாவண்யாவின் பெற்றோர்கள், அந்த வீட்டில் இருந்த சிசிடிவி காட்சியை பார்த்தபோது, அதில் லாவண்யாவை அவரது கணவர் அடித்து கொடுமைப்படுத்தும் காட்சியை கண்டதும் அதிர்ந்தனர். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் லாவண்யாவின் தற்கொலை கடிதத்தில் அவர் கொடுமைப்படுத்தப்பட்டது குறித்து விரிவான தகவல் இருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவித்தனர். மேலும் லாவண்யாவின் கணவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவரிடமும் அவரது குடும்பத்தார்களிடம் விசாரணை நடந்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

More News

கொரோனா ஏற்படுத்திய தாக்கம்: அட்டைப்பெட்டி படுக்கைகளால் நிரம்பி வழியும் இந்தியா!!!

இந்தியா உலகளவில் கொரோனா வரிச்சைப் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்து இருக்கிறது

1000க்கும் அதிகமான உயிரிழப்புகள்: 50 ஆயிரத்தை தாண்டிய சென்னை கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று மூன்றாவது நாளாக 3000க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

மகனுக்கு கொரோனா தொற்று: அதிர்ச்சியில் பூச்சி மருந்தை குடித்த பெற்றோர்கள்

மகனுக்கு கொரனோ தொற்று உறுதி செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானதும் அதனை தாங்க முடியாத பெற்றோர்கள் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

மனநோய்‌ உள்ளவர்களால்‌ மட்டுமே இந்த கொடுமையை செய்ய முடியும்: சாத்தான்குளம் விவகாரம் குறித்து கோலிவுட் நடிகர் 

சாத்தான்குளம் விவகாரம் குறித்து கோலிவுட் திரையுலகினர் மிகவும் தீவிரமாக தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் தொடர்ந்து ஆவேசமான கருத்துக்களை தெரிவித்து வருவது குறித்து அவ்வபோது பார்த்து வருகிறோம்.

ஓய்வுபெற மூன்றே நாட்கள் இருந்த நிலையில் கொரோனாவால் பலியான நர்ஸ்: அதிர்ச்சி தகவல் 

இம்மாதம் 30ஆம் தேதி அதாவது இன்னும் மூன்று நாட்களில் ஓய்வுபெற இருந்த தலைமை நர்ஸ் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது