பாட்டு பாடியே மனைவியின் கோபத்தை போக்கிய கணவன்: சினிமாவை மிஞ்சும் நிஜ சம்பவம்

  • IndiaGlitz, [Tuesday,November 14 2017]

கணவன் மீது மனைவிக்கு கோபம் ஏற்பட்டால் கணவர் பாட்டு பாடி மனைவியை சமாதானப்படுத்தும் காட்சி பல திரைப்படங்களில் நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் இந்த காட்சி டெல்லியில் நிஜமாகவே நடந்துள்ளது.

சமீபத்தில் டெல்லியில் உள்ள தம்பதிகளுக்கு இடையே கடும்சண்டை ஏற்பட்டது. இதனையடுத்து கணவரின் மீது மனைவி டெல்லி அருகே உள்ள ஜான்சி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை செய்ய காவல்நிலையத்திற்கு வருமாறு கணவருக்கு தகவல் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் காவல்நிலையத்திற்கு வந்த கணவர், காவல்துறை அதிகாரிகளிடம் செல்லாமல் நேராக மனைவி இருக்கும் இடம் சென்று ஒரு ரொமான்ஸ் பாடலை காதல் ரசம் சொட்ட சொட்ட பாடினார். இந்த பாட்டில் மயங்கி சமாதானம் அடைந்த மனைவி, கணவரின் தோளில் சாய்ந்து கொண்டு ஆனந்தக்கண்ணீர் வடித்தார். பின்னர் இருவரும் சமாதானம் அடைந்து ஒற்றுமையுடன் வீடு திரும்பினர். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்த வீடியோ ஒன்றை டெல்லியை சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

More News

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்கள்

நவம்பர் 14 என்றாலே அனைவருக்கும் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளும், குழந்தைகள் தினமும்தான் ஞாபகம் வரும். குழந்தை பருவம் என்பது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு பருவம்.

பாலா-ஜிவி பிரகாஷின் 'நாச்சியார்' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கி வரும் படமான 'நாச்சியார்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.

பாகுபலி பாணியில் யானைக்கு முத்தம் கொடுத்தவருக்கு ஏற்பட்ட பரிதாபம்

'பாகுபலி 2' படத்தில் நாயகன் பிரபாஸ் யானைக்கு முத்தம் கொடுத்து அதன் துதிக்கையின் மீது ஏறி முதுகில் உட்காருவார். இந்த கம்பீரமான காட்சி அனைவரையும் கவர்ந்தாலும் இதுவொரு கிராபிக்ஸ் காட்சி

கருணாநிதியை நேரில் சந்தித்த பாஜக ஆதரவு நடிகர்

கருணாநிதி கடந்த சில மாதங்களாக உடல்நலம் இன்றி இருந்த நிலையில் தற்போது அவரது உடல்நிலை ஓரளவு தேறி வருகிறார். இந்த நிலையில் பிரதமர் மோடி உள்பட அரசியல் தலைவர்கள் அவரை சந்தித்து வருகின்றனர்.

நடிகர் நாகார்ஜூனன் ஸ்டுடியோவில் பயங்கர தீ விபத்து

பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவிற்கு சொந்தமான அன்னபூர்ணா ஸ்டூடியோவில் நேற்றிரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.