கள்ளப்புருஷனை விட்டுத்தராத 2வது மனைவி: கத்தியால் குத்திய கணவர்

  • IndiaGlitz, [Wednesday,July 22 2020]

சென்னையை சேர்ந்த ஒருவரின் இரண்டாவது மனைவி தனது கள்ள புருஷனை விட்டுத்தர முடியாது என பிடிவாதமாக இருந்ததால் அவரது கணவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சென்னை எம்கேபி நகரைச் சேர்ந்த சார்லஸ் என்பவருக்கும் பவித்ரா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்

இந்த நிலையில் சார்லஸ், ரமணி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ரமணிக்கும் சார்லஸ்க்கும் சில வருடங்கள் ஒத்துபோன நிலையில் திடீரென ரமணிக்கு ஒரு கள்ள காதலன் இருந்தது சார்லஸ்க்கு தெரியவந்தது. இதனை அடுத்து ரமணியை சார்லஸ் கண்டித்துள்ளார். ஆனால் ரமணியோ, ‘அவர்தான் தனது உண்மையான புருஷன் என்றும் அந்த புருஷனை விட்டு கொடுக்க முடியாது என்றும் பிடிவாதமாக இருந்ததாக தெரிகிறது

இதனால் ஆத்திரமடைந்த சார்லஸ், ரமணியை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சார்லஸை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். கருத்து வேறுபாடால் முதல் மனைவி பிரிந்த நிலையில் இரண்டாவது மனைவியும் கள்ளபுருஷனை விட்டுத்தர முடியாது என்று கூறியதால் அவரை கொலை செய்துவிட்டு தற்போது சிறையில் கம்பி எண்ணும் பரிதாப நிலைக்கு சார்லஸ் தள்ளப்பட்டு உள்ளார்