காலையில் கணவர், மாலையில் மனைவி: இறப்பிலும் இணைபிரியாத 75 ஆண்டுகால அரியலூர் தம்பதிகள்!

  • IndiaGlitz, [Friday,September 11 2020]

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 75 ஆண்டுகால தம்பதிகள் காலையில் ஒருவரும் மாலையில் ஒருவரும் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் என்ற பகுதியைச் சேர்ந்த காசான்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சேதுமணியன் மற்றும் கமலம் தம்பதிகள். 75 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்த இவர்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்த நிலையில் வயது மூப்பு காரணமாக சேதுமணியன் நேற்று காலை உயிரிழந்தார். இதனையடுத்து அவருக்கு இறுதிச் சடங்கு செய்த பின்னர் உறவினர்கள் அனைவரும் அவரது மனைவி கமலம் அவர்களுக்கு கோடித்துணி போட்டுக் கொண்டிருந்தனர் அப்போது துயரம் தாங்காமல் அழுத அவர் திடீரென மயங்கி விழுந்தார் உடனடியாக அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற நிலையில் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் ஒருசில மணி நேரத்தில் இறந்ததை அடுத்து அவரது உடலை கணவரை அடக்கம் செய்த இடத்தின் அருகிலேயே அடக்கம் செய்தனர். 75 ஆண்டு காலமாக ஒன்றாக வாழ்ந்த தம்பதியினர் காலையில் ஒருவரும் மாலையில் இன்னொருவரும் இறந்த சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

More News

கல்லூரி இறுதியாண்டு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு…. சில முக்கிய தகவல்கள்!!!

கொரோனா தாக்கத்தால் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரியின் இறுதியாண்டு தேர்வுகளைத் தவிர மற்ற தேர்வுகளை தமிழக அரசு ரத்து செய்து உத்தரவிட்டது.

எலிகள் மேற்கொண்ட விண்வெளி பயணம்… காரணம் தெரியுமா???

விண்வெளி ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி மையத்தில் ஆண்டுகணக்கில் தங்கியிருக்கும் விண்வெளி வீரர்கள் பூமிக்கு வரும்போது நரம்பும் சதையுமாக மட்டுமே வருகின்றனர்

ஐபிஎல் திருவிழா ஸ்பெஷல் டிரைலர் சைலண்ட் சுனாமி சன் ரைசர்ஸ்.... பேட்டிங், பவுலிங் மாஸ்டர்ஸ்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அணிகளில் பேட்டிங், பவுலிங் என சமபலம் கொண்ட அணியாகத் திகழ்வது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

தமிழகத்திலும் ரூ.20 க்கு மூலிகை பெட்ரோல் விற்பனை… பரபரப்பு தகவல்!!!

மதுரையைச் சார்ந்த ராமர் பிள்ளை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மூலிகை பொருட்களில் இருந்து பெட்ரோல் கண்டுபிடித்து இருப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

சுதா கொங்கராவின் ஆச்சரியமான அப்டேட்?

சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' என்ற படத்தை இயக்கிய இயக்குனர் சுதா கொங்கரா அடுத்ததாக தளபதி விஜய் படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது.