நான்காவதும் பெண் குழந்தை: 8 மாத கர்ப்பிணி மனைவியை தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்த கணவன்

  • IndiaGlitz, [Saturday,July 11 2020]

ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் பெற்ற மனைவி, நான்காவதாக வயிற்றில் உள்ள குழந்தையும் பெண் குழந்தை என்பதை அறிந்து ஆத்திரமடைந்த கணவர், 8 மாத கர்ப்பிணி என்றும் பாராமல் மனைவியை அடித்து தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்த சம்பவம் செங்கம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மணிகண்டன் என்ற ஆட்டோ டிரைவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஷோபனா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இது ஒரு காதல் திருமணம் என்பதும் இந்த தம்பதிகளுக்கு ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக ஷோபனா மீண்டும் கர்ப்பமானார். அவர் 8 மாத கர்ப்பிணியாக இருக்கும்போது சட்டத்துக்குப் புறம்பாக ஸ்கேன் எடுத்து வயிற்றில் உள்ளது மீண்டும் பெண் குழந்தை என்பதை மணிகண்டன் கண்டுபிடித்துள்ளார். இதனை அடுத்து ஒரு ஆண் குழந்தை பெற்றுக் கொடுக்க முடியவில்லையா? என ஷோபனாவை அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது.

இந்த நிலையில் திடீரென வயிற்று வலியால் ஷோபனா இறந்து விட்டதாக அவரது பெற்றோர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சோபனாவின் பெற்றோர்கள் மருத்துவமனையில் ஷோபனாவின் பிணத்தை பார்த்தபோது அவரது கழுத்தில் கயிறு இறுக்கிய தடம் இருந்தது. இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்த நிலையில் போலீசார் மணிகண்டனை விசாரித்து வருகின்றனர். விசாரணையில் அவர் நான்காவதும் பெண் குழந்தை என்பதால் ஷோபனாவை அடித்து துன்புறுத்தி தூக்கில் தொங்க விட்டதாக தெரிகிறது. இது குறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

More News

அமைச்சர் கே.பி.அன்பழகன் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் பாமர மக்கள் மட்டுமின்றி பதவியில் இருக்கும் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏகளுக்கும்

தங்க மாஸ்க்கை அடுத்து வைரலாகும் வைர மாஸ்க்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என உலக சுகாதார மையம் முதல் மாநில சுகாதார அமைச்சகம் வரை மக்களுக்கு அறிவுறுத்தி

ரஜினியை சந்தித்த அந்த மறக்க முடியாத தருணம்: பிரபல இயக்குனரின் மலரும் நினைவுகள்

நடிகரும் இயக்குனருமான சேரன் அவ்வப்போது தனது மலரும் நினைவுகள் குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து வருகிறார் என்பது தெரிந்ததே.

விஜய் மில்டனின் அடுத்த படம் குறித்து சூர்யா தகவல்!

தமிழ் சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகிய விஜய் மில்டன், கடந்த 2014ஆம் ஆண்டு 'கோலி சோடா' என்ற திரைப்படத்தை இயக்கினார்.

இந்தியாவின் கொரோனா தடுப்பூசி: எப்பதா பயன்பாட்டுக்கு வரும்??? நாடாளுமன்றத்தின் புது அப்டேட்!!!

வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்திய விஞ்ஞானிகள் தயாரித்த கொரோனா தடுப்பூசி பயன்பாட்டு வரும்